திங்கள், 15 நவம்பர், 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்

இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது சில ஜோதிர்லிங்க தலங்களின் புகைப்படங்களை உங்கள் தரிசனத்திற்காக பகிர்ந்துகொள்ள விரும்பி பதிக்கின்றேன்.
இதை எல்லாம் அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது. ஏதோ உங்களுக்கும் இந்த தலத்தை பார்வை இடுவதற்கு சிவனின் அருள் உண்டு  என்பதை மனதிற் கொண்டு  இவற்றைப் பதிக்கிறேன்.

"பக்தியோடு கண்டால் எல்லாம் சிவ மயமே.
சிவம் சிவமயம் எங்கும் அவன் மயம்".

சோம் நாத் ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்


ஓம் காரேஸ்வரரின் ஆலய தரிசனம். ஏனோ தெரிய வில்லை மூலவரை புகைப்படம் எடுக்கத்தோன்றவில்லை.



ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் மேல் உள்ள சிவலிங்கம் உங்களின் தரிசனத்திற்காக


ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் எழில்மிகு தோற்றம், நர்மதா நதிக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீஓம்காரஸேவரைன் அலய கோபுர தரிசனம்



ஓம் காரேஸ்வரரின் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள் மிகு ஸ்ரீசனிஸ்வர பகவானின் தரிசனம் உங்களுக்காக... இவரை இதுபோல யாரவது இப்படி தரிசித்து இருப்பீர்களா?? இவர் ஓம் காரேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும் போது நமக்காக தரிசனம் தருகிறார், ஏற்கனவே நான் பதித்த ஸ்ரீசனிஸ்வர காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பு.



மமளேஸ்வரர் ஆலயத்தின் எழில்முகு தோற்றம் மற்றும் மமளேஸ்வரரின் அற்புதமான தரிசனம். ஓம்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு வரும்போது இவரை தரிசிக்கலாம். இந்த இரு ஆலயங்களையும் ஜோதிர்லிங்க தலங்களாக பக்தர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.





ஓம்காரேஸ்வரரின் ஆலய்த்தை சுற்றி வரும்போது இந்த துர்க்கை அம்மனின் தரிசனத்தை காணலாம்.


மமளேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.



காணுவதற்கரிய சிவ பார்வதி தரிசனம்ஆலய சுவரில்
மமலேஸ்வரரை எப்போதும் தனது மூச்சுக்காற்றால் தாலாட்டும் நந்தீஸ்வரர்


மமலேஸ்வரரின் ஆலயத்தோற்றம்


மமலேஸ்வரரின் ஆலயத்தை சுற்று வரும்போது இவரின் தரிசனத்தை காணலாம்,
உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி வினாயகரின் தரிசனம் . இதில் வினாயகரின் மூன்று முகம் உள்ளதை அனைவரும் கவனித்து தரிசியுங்கள்





இதுதான் அந்த ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்



இந்த ஆலயத்தில் உள்ள ஜகன் நாதரின் எழில்மிகு அலங்காரத்தோற்றம்

உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலய்த்தின் அருகில் உள்ள மகா கணபதியின் எழில்மிகு தரிசனம்.


இந்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள துர்கா தேவியின் நவராத்திர் அலங்காரம். நான் ஓம்காரேஸ்வரர் சென்று வரும்போது எடுத்த படம் உங்களுக்காக



அங்கே உள்ள ஒரு சிவாலயத்தின் எழில்முகு தோற்றம்




உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி மாதா மகாளி விக்கிரமாதித்தனுக்கு அருளிய மகா தேவி.


உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் நவராத்திரியை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட மகா துர்கையின் எழில்மிகு தரிசனத்தை கண்டு மெய்சிலிர்த்தேன். இதோ




இதுவும் உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு சிவாலயத்தின் முதலில் இந்த தோரண அலங்காரம். அந்த ஆலயத்தில் இராமேஸ்வரர் அருள்கிறார்.

 


உஜ்ஜயினி மகாளி அம்மனின் ஆலயத்தில் உள்ள பல கைகள் பல கால்கள் உள்ள உக்கிர காளியின் உக்கிர தோற்றம்.





நாமெல்லாரும் சிவனை காலால் மிதிக்கும் உக்கிர காளியை பார்த்திருக்கிறோம் ஆனால் சிவன் காளியை தூக்கி செல்லும் இந்த படம் கொஞ்சம் புதியதாகவே உள்ளது. இதனுடைய கதையோ அல்லது புராணமோ தெரியும் பட்சத்தில் உங்களுக்கு சொல்கின்றேன்.


பூமிக்கடியில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் இதுவும் உஜ்ஜயினில்தான் உள்ளது,


ஸ்ரீ மகா காளபைரவர்


சதாசிவனான அந்த சிவனின் மாறுப்பட்ட தரிசனம்



மேலே உள்ள சிவனின் ஆலயம் இது.

இதுவும் உஜ்ஜயினியில் ஒரு இடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த துர்க்கையின் அலங்காரம்

பூமிக்கடியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் உள்ள அம்மன், பெயர் இந்தியில் உள்ளது. எனக்கு இந்தி படிக்கத்தெரியாது



இது அந்த குகைக்கோயிலுக்கு வெளிமதிர்சுவரில் உள்ள பகவான். அனேகமாக வாஸ்து பகவானோ என்பது என் சந்தேகம். அவர்தான் இந்த மாதிரி அமர்ந்திருப்பதால் சொல்கின்றேன்.

தமிழ் நாட்டில் உள்ள செவ்வாய் கிரக தலம்போல் உஜ்ஜயினியில் உள்ள மங்கள்னாத் சிவனின் அன்னாபிசேக அலங்காரம் தரிசனம்.








நாகராகஜரின் விஷ்வரூப தரிசனம். இப்படி ஒரு கரு நாக ராஜாவை முதன்முறையாக உஜ்ஜயினி நதிக்க்ரையில்தான் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்


உஜ்ஜயினி நதிக்கரையில் அருள்பாலிக்கும் பிரம்மா


அருகிலேயே அருள் பாலிக்கும் வினாயகர்



நாக சர்ப்பதோசங்கள் நிவர்த்தி செய்யும் ஆற்றுக்கரையில் அமர்ந்திருக்கும் ஐந்து சிவலிங்கங்கள்.

புதுவிதமான சிவனின் அலங்கார தோரணம்