வியாழன், 19 ஜூலை, 2012

ஸ்ரீ கணபதி சுவாமிகள் (தென் காசி)

      தென் காசியில் சமாதி கொண்டு இன்றும் அருள் பலித்து வரும் கணபதி சுவாமிகள் அந்த இடத்தில அடங்கி 120 ஆண்டுகள் ஆகின்றனவாம் திருசெந்தூர் கோவிலை கட்டிய மூவர் சமாதிகள் கோவிலுக்கு தெற்கே கடற்கரையில் உள்ளன. அம்மூவருள் ஒருவராகிய மௌன குரு சுவாமிகளே ஸ்ரீ கணபதி சுவாமிகளின் குரு. சுவாமிகள் பரிபூரணமடைந்த விபரம் தெரிய வில்லை. நாள் நட்சத்திரம் தெரியா விடின் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பூஜை செய்தல் போதும் எனும் நியதிப்படி ஸ்ரீ கணபதி சுவாமிகளுக்கு மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் குரு பூஜை நடத்தபடுகிறது .


இவரது சமாதி கோயில் அமைந்துள்ள இடம் :
தென் காசியில் ப.எண் 104எ /2, பு.எண் 150 வாய்க்கால் பாலம் என்னும் முகவரியில் ஸ்ரீ முருகன் சிமெண்ட் டைல் வொர்க்ஸ் வளாகத்துள் சுவாமிகளின் சமாதிக்கோவில் உள்ளது கருவறையுள் இரண்டடுக்குகள் உள்ள பெரியதும் அதன் மேல் சிறியதுமான கருங்கல் மேடையே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது கிழக்கு நோக்கிய சன்னதி.

வெள்ளி, 13 ஜூலை, 2012

குருவும் பிரிவும்


தானே புலனைந்தும் தன் வசமாகும்
தானே புலனைந்தும் தன் வசம் போகும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம்பிரான் தனை சிந்தித்தே!

இது திருமூலரின் வார்த்தைகள்....

குருவின் மேல் கொண்டுள்ள எண்ணமானது,இயல்பூக்க நியதியின் அடிப்படையிலே, நினைப்போருக்கு காலங்களின் அளவுகோல்களை கடந்து உதவுகிறது குருவின் ஆற்றல்....

குரு என்பவரின் உதவியானது நாம் புலனைக் கொண்டு கணிக்கும் எதையும் தாண்டி இருந்து அமைகின்றது. இதனால் குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவிலே அவரின் உதவி எல்லை அற்றிருக்கிறது...
குருவின் கவிதை என்பது வெறும் தமிழின் செழுமைக்காக நமக்கு தரப்பட்டதல்ல.... நாம் கைகளை தட்டி கரகோசம் எழுப்பி ஆரவாரம் செய்து விட்டு போக குருவின் கவிதை ஒன்றும் பொழுது போக்கானது அல்ல... ஒவ்வோர் எழுத்தும் அணுவிலே நம்மை ஒன்ற வைக்கும் தொண்டு...

அவரின் கவிகளை நாம் சொல்வது நம்முடைய அறிவை உயர்த்தத்தான்.... எட்ட வில்லை அறிவிற்கு என்றால் உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்? என்று நமது குரு கேட்பார்....
சோதிப்போர் புலனிறிவில் என்னைக்காணார்...
சுய நிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே...
குருவானவர் நம்மோடு பேசிக் கொண்டிருந்த போதும் கூட அவர் கண்டங்களைத் தாண்டி தன்னை அண்டும் சீடனுக்குத் தேவையானதைத் தந்துகொண்டே தான் இருந்தார். இப்போதும் கூட அவரை நினைக்கும் போதே அவரின் திருப்பியக்க ஆற்றல் சரியாக இருக்கிறது... அவர் சமாதி அனுபவம் பெற்றது 60வருடத்திற்க்கு முன்னால்.... அவர் தன்னுடைய உடலை விட்டு பிரிந்து நின்றது அப்போது தான்...
குருவின் உடலை விட்டு நிரந்தரமாக சமாதி ஆனது தான் சமீபத்தில் நடந்தது... ஆனால் குரு நம்மை விட்டு பிரிந்து விட்ட நாள் என்று ஏதாவது உண்டா? எப்படி அது நிகழும்? ஏது அந்த நிலை? சிந்தித்து பாருங்கள்...
நாம் குருவின் சமாதி நாளை பிரிந்து விட்ட நாள் என்று சொல்கிறோம்... இன்னும் என்னென்னமோ அறிவிற்க்கு சிறிதும் சம்மந்தமற்ற செயல்களை செய்கிறோம்... ஆனால் குரு நம் அறிவோடு நிரந்தரமாக இணைந்து விட்ட நாள் என்று ஆனந்தப்பட வேண்டிய நாள் அது... தவத்திலே அறிவை அறிவிலே செலுத்தி அவரின் அகலாத நிலையை உணரவேண்டிய நாள் தான் அந்த சமாதி ஆன மார்ச் மாதம் 29ம் தேதி 2006...
என்னமோ துக்கப்படுவது போலவும், துக்க நாளை போஸ்டர் அடித்து மகிழ்வதுமான அந்த செயல்கள் நம்மை அவரை நோக்கி கொண்டு செல்லாது...
அதற்குத்தான் குரு எழுதினார்...
சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்...என்று.
புலனைக்கொண்டு குருவை பார்க்காதே மானிடனே என்று குருவே அறிவித்தது இருக்கிறார்....
குரு சொல்லாத கருத்தே இல்லை... இறப்பிற்குப் பின்னர் உயிரின் நிலை என்ற பகுதியிலே,
துரியாதீத தவத்தை செய்து பழகியோர் உயிர் பிரியும் போது, பழக்க நிலையான அந்த இறை வெளியோடு தானாகவே சென்று கலந்து விடும் என்று தெளிவாக எழுதி இருக்கிறார்....
இதிலே மாற்றுக்கருத்து உண்டோ? இருந்தால், விளக்கும் வகையில் அறிவு இருந்தால் நமது அன்பர்களுக்காக எழுதுங்கள்.... சொல்லுங்கள்...
நிறைய விசயங்களைச் சொல்லலாம்.... ஆனால் குரு நம்மை விட்டு பிரிந்த நாள் என்றும், இறந்து விட்ட நாள் என்று சொல்லிக்
கொண்டு அலைவோர்கள் இனிமேலாவது மனவளக்கலை புத்தகத்தை கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பித்து தவப் பயிற்சியை தொடங்க                 வேண்டியது அவசியம்...
குரு நம்மை விட்டு பிரிந்து இருக்கிறாரா? அல்லது நாம் குருவை விட்டு பிரிந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறோமா?
குரு இறை வெளியிலே இருக்கிறார் என்றிருக்கும் போது, நம்மை விட்டு குரு பிரிந்து விட்டார் என்று சொல்கிறோமே, அது எப்படி பொருந்தும்?நாம் குருவை/இறைவெளி விட்டு பிரிந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறோமா?
தவத்திலே குரு இறைவெளியை விட்டும், நாம் வெளியை விட்டும் விலகியதாக ஏதாவது உணர்ந்தாரா?
நாம் எங்கே? குரு எங்கே? இறை நிலை எங்கே? அத்வைதம் குருவின் தத்துவம் என்று சொல்கிறோமே... அது எப்படி? அத்வைத முறைப்படி குரு, நாம், இறைனிலை என்று எப்படி பிரிவு இருக்க முடியும் என்று விளக்கிச் சொல்ல முன் வந்தால் நன்றாக இருக்கும்....
குரு நம்மை விட்டு போய் விட்டார் என்று இனிமேல் எவர் சொல்ல நினைப்பதற்க்கு முன்பாக, குரு எங்கே இருக்கிறார் என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றை பார்க்கவேண்டும்... அது வரை குருவைப் பற்றித்தெரியாத, முட்டாள்தனமான எதையும் வெளியில் சொல்லக்கூடாது.... சொல்லி, விளக்கும் அறிவு வரும் வரை அந்த தெரியாத விசயத்திலே அடக்கி வாசிப்பது தான் சிறந்தது...
உடலைப் பிடித்துக்கொண்டு அறிவை ஒதுக்காதீர்கள்.... நமது முட்டாள் தனத்திற்குத் துணையாக குரு இருக்கமாட்டார்...
அறிவைப்பிடித்துக்கொண்டு குருவை பாருங்கள்....
நமது உயர்வு என்பது குருவின் மேல் உள்ள அன்பின் ஆழத்தைப்பொறுத்து இருக்கிறது.... நமது பதவியும் கௌரவமும், செல்வமும் நமக்கு ஒரு போதும் குருவை உணர்த்தாது....