செவ்வாய், 27 நவம்பர், 2012

மலை வலத்தின் சிறப்பு


  பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. "அருணன்"் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். "அசலம்" என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2688 அடி.
அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிÐங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேடமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.

திருவண்ணாமலை - தலப் பெருமை

திருவண்ணாமலை - அண்ணாமலையண்ணல்
உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல்.

நால்வரால் பாடல்பெற்ற திருத்தலம்
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
திருமுறைத்தலம்
திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
முக்தி தரும் தலம்
முக்தி தரும் தலங்கள் நான்கென சிவ புராணம் குறிப்பிடுகிறது. அவற்றுள் திருவண்ணாமலையும் ஒன்று. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது.
பஞ்ச பூதத் தலம்
இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. "நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்" என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். "பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்" என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். இவற்றில் 'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.
ஆதாரத்தலம்
ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரக தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் முதலான தெய்வங்களே வழிபட்டதான சிறப்புடையது.

ஞானிகளும் துறவிகளும்
இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச்சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
மகான் சேஷாத்திரி சுவாமிகள்
அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமசிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் முதலான
ஞானத்தபோதனர்களை தனது ஜோதியில் இணைத்துக்கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.
All rights 2012 (c) Reserved. Site designed & maintained by Arunachaleswarar Temple, Tiruvannamalai

திருவண்ணாமலை தல வரலாறு

லிங்கோத்பவர்
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு துèரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு அருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்Ðடார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மஹாசிவராத்திரி நாளாகும்.
இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது. ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமான் திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமானே சிவலிங்க திருஉருக்கொண்டு மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடம் இத்திருக்கோயில் ஆகும்.

அர்த்தநாரீஸ்வரர்
உமாதேவியார் விளையாட்டாக சிவபெருமுèனின் கண்களை தன் கையால் மூட உலகம் எங்கும் இருளாயிற்று. ஜீவராசிகள் இருளில் இன்னல்கள் அடைந்தன. இந்த பாவம் தீர்க்க வேண்டி உமாதேவியார் காஞ்சி மாநகரத்தில் மணலை லிங்கமாக அமைத்து பூஜை செய்துவரும் நாளில் சிவபெருமான் îதான்றி திருவண்ணாமலை சென்று தவமியற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளிச் செய்தார். சிவபெருமான் கட்டளைப்படி பார்வதி தேவியார் திருவண்ணாமலைக்கு வந்து பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். தவத்தை மகிடாசூரன் என்பவன் கெடுத்து வந்தான். உமாதேவியார் துர்க்éயாக உருவெடுத்து மகிடாசூரனை வதம் செய்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி கூடிய கிருத்திகை பிரîதாஷ கால்த்தில் மலை மேல் ஜோதி ஸ்வரூப தரிசனம் கண்டு சிவபெருமான் இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார்.
அதனைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று மாலை சரியாக 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளி காட்சி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமான் நேரில் îதான்றுதல்
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர். அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம்் வரங்கள் பல பெற்றவர். அருணகிரிநாதரின் புகழில்Ð பொறாமையுற்ற சம்பந்தன் தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார். அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் îதான்றச் செய்விப்பது என்பது தான் போட்டி.
இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் îதான்றச் செய்ய இயலவில்லை. ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் இத்தலம் முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சிவபெருமானால் வள்ளாள மகாராஜாவின் அகந்தை அகற்றப்பட்ட சம்பவம்
வள்ளாள மகாராஜா இக்கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன் தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார். அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார். தன் தவறை உணர்ந்த மன்னர் இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன் பின் பத்தாவது நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார். சிவபெருமானின் இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

முருகப்பெருமானால் அருணகிரிநாதர் காப்பாற்றப்பட்ட சம்பவம்
தனது இளமைக் காலத்தில் விரக்தியுற்ற அருணகிரிநாதர் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் உச்சியிலிருந்து குதிப்பதற்கு முயற்சியுற்றார். முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இச்சம்பவத்திற்குப் பின் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளினார்.
வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்
எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும் அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக îதான்றினார். இறைவனின் அருளை வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து விட்டார்.
பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார். இப்போது கூட ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.

யானை திறை கொண்ட விநாயகர்
ஒரு சமயம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசர் ஒருவர் போரிட்டு இப்பகுதியைக் கைப்பற்றிய பின் தன் படை வீரர்களுடன் இவ்விடத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு யானை ஒன்று தன்னையும் தன் படைவீரர்களையும் விரட்டியடிப்பதாகக் கனவு கண்டார். இது குறித்து விசாரித்த போது தான் தவறுதலாக விநாயகப் பெருமானால் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதத் தலத்தில் தங்கியுள்ளதாக அறிந்தார். தன் தவறை உணர்ந்த அவ்வரசர் விநாயகப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டியதுடன் தன்னுடைய யானைகளையும் விநாயகப் பெருமானுக்கு காணிக்கையாக அளித்தார்.

கிளி கோபுரம்
ஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார் தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.
பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் Ð கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார்.
இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கிரி வலம்!

 
திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்கே, பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். ஆனால், மனதில் தைரியத்துடன் ஒரே நாளில் ஐந்து முறை தொடர்ந்து சுற்றுவதற்கு மனபலம் இருந்தால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என அண்ணாமலை புராணம் தெரிவிக்கிறது. அண்ணாமலையின் சுற்றளவு 14 கி.மீ. ஐந்து முறை நடந்தால் 70 கி.மீ ஒரே நாளில் நடக்க வேண்டும். முடியும் என நினைக்கும் பக்தர்கள், இதயநோய் இல்லாதவர்கள், நல்ல ஆரோக்கியம் உடையவர்கள், இளைஞர்கள் இதற்கான முயற்சியை எடுத்தால் வாழ்நாள் முழுவதும் ஆன்மபலம் கிடைப்பதுடன் எதிர்கால துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.