சனி, 17 அக்டோபர், 2015

அருள்மிகு ருத்ராம்பிகா சமேத அருள்மிகு ருத்ரேஸ்வரர்


காஞ்சிபுரம் மாவட்டம் 1000 வருடங்களுக்கு முன்னர் உள்ள சிவாலயம், மிகப் பெரிய சிவ லிங்கத்துடன் இருக்கிறது.. இது கல்பாக்கம் அருகே அனுபுரம் குடிபெரம்பாக்கம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட குடிபேரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ருத்ராம்பிகா சமேத அருள்மிகு ருத்ரேஸ்வரர் ஆலயம் உள்ளது. (இக்கோயில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை )
(கல்பாக்கம்)அனுபுரத்தில் இருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் அல்லது சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கம் இடம் வரும், அங்கிருந்து சுமார் 3கி.மீ. தொலைவில் குடிபேரம்பாக்கம் உள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கே அருகில் மற்றொரு மிகவும் புராதனமான சிவன் கோயிலும் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த , நமது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய சிவலிங்கத்தை இங்கு காணலாம். கோயிலை "குடி'' என்று தெலுங்கில் குறிப்பிடுவர். தமிழில் "தளி'' எனக் குறிப்பிடுவர். திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூர் முன்பு "தளிபெரும்பாக்கம்" என்று அழைக்கப்பட்டதை இவ்வூருக்கு அருகில் உள்ள "வீராபுரம் சிவன் கோயில்" கல்வெட்டு குறிப்பிடுகிறது. குடிபேரம்பாக்கம் ருத்ரேசுவரர் ருத்திரர்களால் வழிபாடு செய்யப்பட்டவர்., இவரை சிவராத்திரி நாட்களில் அந்தி சாயும் பொழுதில் நெய் தீபம் ஏற்றி, வில்வத்தால் அர்ச்சனை செய்து, மணிவாசகரின் சிவபுராணம் பாராயணம் செய்து தொடர்ந்து 8 மாத சிவராத்திரி நன்னாட்களில் வழிபட தீயவை, எதிரி தொல்லை, பகைமை, வறுமை, உடல் பிணிகள் ,மன கவலைகள் அகன்று ,வாழ்வில் ஒளி பிறக்கும், வளமும் நலமும் சேரும்...நீண்ட ஆயுள் கிட்டும் என்று நம்பப் படுகிறது..நன்றி