சனி, 24 ஜனவரி, 2015

சம்ஸ்ஹ்ருதமும்,தமிழும் சைவத்தின் இரு கண்கள்


சமஸ்ஹ்ருதம்,தமிழ் ஆகிய இரு மொழிகளையும் எமக்கருளியவர் சிவபெருமான் என்பதை முதலில் சைவர்கள் நன்றாக கருத்தில் கொள்ளவேண்டும். இன்று தாம் சைவர்கள் என்று கூறுவோர் பலர் சம்ஸ்க்ருதத்தினை புறக்கணிப்பதை பார்க்கும் பொழுது மனம் வேதனையடைகிறது. காரணம் சைவரல்லாதவர்கள் சம்ஸ்க்ருதத்தினை புறக்கணிக்கலாம், ஆனால் சைவர்கள் அவ்வாறு செய்வது தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் செயலை ஒக்கும். சம்ஸ்க்ருத பாஷையை வெள்ளையர்கள் படித்து நூற்களை எழுதுவதைப் பார்த்த பிறகும் சைவர்கள் அதைப் படிக்காமல் அல்லது சம்ஸ்க்ருத மஹிமையை அறியாது இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

சம்ஸ்ஹ்க்ருதம் என்பது ஒரு மாநிலத்திற்கு சொந்தமானதல்ல அது சத்சைவர்கள் வாழும் இடமெங்கும் உயிரோட்டமாக இருக்கும். நன்னூல் சேனாவரையம் முதலிய இலக்கண நூல்கள் சம்ஸ்ஹ்க்ருதம் எல்லா தேசத்திற்கும் பொது என்று கூறுகின்றன. திருமுறையாசிரியர்களும்..
• “ஆரியத்தோடு செந்தமிழ் பயனறிகிலா அந்தகர்
• ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
• செந்தமிழோடாரியனைச் சீரியானை
• ஆரியந் தமிழோடிசை யானவன்
• வடமொழியுஞ் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்
• வடசொலும் தமிழ்ச்சொலும் தாள் நிழல் சேர”
என்றெல்லாம் கூறியிருப்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். இதுவரையில் நம் நாட்டில் மற்ற சமயங்களால் தான் சைவசமயத்திற்கு கஷ்டங்கள் நேர்ந்ததை வரலாற்றால் அறிகிறோம். ஆனால் இன்றோ ஒரே சமயத்துக்குள் இருந்துகொண்டு மொழியின் பெயரால் அழகிய சமயத்தை பிரிக்க நினைக்கும் இவர்களை பார்க்கும் பொழுது இது கலியின் கொடுமையோ ஆணவத்தின் வலிமையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இவர்கள் எல்லாம் சிவபக்தர்கள் தானா என்றும் ஐயம் உண்டாகிறது. சம்ஸ்க்ருதம் சைவர்களுக்கு தேவை இல்லை என்றால் ஞானசம்பந்தப்பெருமான் முதல் சிவனடியார்கள் அனைவரும் அதைப் போற்றுவானேன்? சிந்தியுங்கள். உண்மைநூற்களை படியுங்கள்.தெளியுங்கள். பிறரால் பேசப்படுவதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை உண்மை என்று நம்பாதீர்கள். உண்மை என்ன என்று நீங்களும் ஆராயுங்கள்.
சைவசமயம் சார்பான சம்ஸ்ஹ்க்ருத நூற்கள் பல இன்னும் வெளிவராமல் ஓலைச்சுவடிகளாகவே இருக்கின்றன. காரணம் நம் நாட்டுச் சைவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நூல் என்று ஒதுக்குகின்றனர், அவற்றை வெளியிடுவதும் சத் சைவர்கள் கடனே. இதுவரை எளியேனால் கூறப்பட்ட கருத்துக்களை மனத்தில் கொண்டு
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்னும் பொய்யாமொழிக்கிணங்க திருமுறைகள்,மெய்கண்ட சாஸ்த்திரங்கள், தாயுமானவர், அருணகிரிநாதர் போன்ற அநுபூதிச் செல்வர்களின் நூற்களில் எங்காவது ஓரிடத்தில் சம்ஸ்ஹ்க்ருதம் சைவர்களுக்கு அல்ல என்றோ அது வடநாட்டிற்குரியது என்றோ கூறுகிறார்களா என்று ஆராயுங்கள். அப்படியொரு கருத்தை உங்களால் காணவே முடியாது.
சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்து சைவத்தையும், தமிழையும் போற்றிவளர்த்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆகியோரது நூற்களைப் படியுங்கள். உண்மை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளங்கும். பிறகு குறுகிய மனம் படைத்து இக் காலத்து அறிஞர்கள் சிலரின் நூற்களைப் படியுங்கள். சோற்றுக்குள் முழுப்பூசணிக்காயை மறைக்கமுயலும் அவர்களது இயல்பு உங்களுக்குத் தானாகவே விளங்கும்.
“சமயம் நமக்கு என்ன செய்தது என்று பார்க்காமல் சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்” இதனை மையமாக கொண்டு சைவசமயம் வளர ஒவ்வொரு சைவரும் தங்களால் இயன்றளவும் பணியாற்ற வேண்டும். அதுவே நமது கடன். இவைகளை செய்தால் மேன்மை கொள் சைவ நீதி உலகமெல்லாம் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வியாழன், 22 ஜனவரி, 2015

வீடுபேறு அடைந்தவர்கள்

சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள் எனப்பொருள் கொள்வர் சிலர், ஒரு செயல் நிறைவேறிவிட்டதா என வினவுவார் காய சித்தி ஆயிற்றா என வினவுவது வழக்கம், சாயுச்சிய நிலை அடையப்பெற்றவரே சித்தர் என்பர். அட்டமா சித்தி முதலிய யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று அழைப்பர்.

சிலர் சித்துக்கும் சித்தத்ததுக்கும் தொடர்பு காட்டிச் சித்தத் தெளிவுடையாரே சித்தர் என விளக்கம் அளிப்பர்.
'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்" (அகத்தியர் நூறு 50)
'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்"

(வான்மீகர் சூத்திர ஞானம் 2)
'செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்
திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்" (வான்மீகர் சூத்திர ஞானம் 3)
எனவரும் இப்பாடல்கள் மேற்கூறிய கருத்திற்குச் சான்றாக விளங்குகின்றன.
சித்தருட் சித்தராய் விளங்கிய திருமூலர் சித்தர் பற்றிக் கூறும் செய்திகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே" (1490)
'சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே" (2526)
எனவரும் திருமூலன் பாடல்கள். யோகச் சமாதியை விரும்பியவரும் சிவத்தைக் கண்டவரும் சித்தர் ஆவர் எனக் குறிப்பிடும்.

கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர். அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன. பழினியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும் பெற்றிருப்பவன் ஆதலின் முருகனுக்குச் சித்தன் என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம் சித்துக்களாகக் குறிப்பிடும். மக்களால் சித்தர்களும் கடவுளராகப் போற்றப்பட்டனர்.
மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால் உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவுயுள்ளது எனப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுத்தரனார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகின்ற பெயோர்களே மகான்களே சித்தர்கள், என்று மீ.ப. சோமசுந்தரனார் தம் சித்தர் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பகுதி 1 பக்கம் 14)

இறையடியார்களுள் பக்தர், பகவர், முனிவர், சித்தர் எனப் பல வகையினர் இருந்தனர் என்பர், பெரியாழ்வார் தம் பாசுரத்தில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசை விளக்காய்
நிற்கின்ற திருவரங்கமே

என்று பாடியிருத்தல் மேற்கூறியதற்குச் சான்றாக அமைகிறது. சித்தர் பாடல்களிலும் முனிவர், இருடியர், சித்தர் எனப் பல வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் ஞானத்தில் (14) காயசித்தி, மாயசித்தி, யோகசித்தி, வாத சித்தி எனப் பல வகைச் சித்திகள் கூறப்பட்டுள்ளன. சித்தரையும் காயசித்தர், யோகசித்தர், ஞானசித்தர் எனச் சிலர் மூவகையினராகக் கூறுவர். இங்ஙனம் சித்தர்களையும் சித்திகளையும் பாகுபடுத்தியும் பாடியுள்ளனர்.

சித்துக்கள் பற்றிய குறிப்புக்கள் பண்டைய இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன.
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிடு முந்நீர் காலிற் செல்லார் (130)
என்னும் குறுந்தொகைப் பாடல் அடிகளும்.
நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்
சலத்தில் தியுமோர் சாரணன்
என்னும் மணிமேகலைத் தொடர்களும் சில சித்துக்களைத் தெவிக்கின்றன.
தாயுமானவர், பாம்பாட்டிச் சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் தத்தம் பாடல்களில் சித்து விளையாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

தாயுமானவர் மதயானையை அடக்குதல், கரடி புலிகளின் வாயைக் கட்டுதல், சிங்கத்தை முதுகின் மேல் ஏற்றுதல், பாம்பைப் பிடித்தாட்டுதல், ஐந்து உலோகப் பொருள்களையும் விலையுயர்ந்த பொருளாக மாற்றுதல் பிறர் கண்ணிற் படாமல் உலாவுதல், தேவரை அடிமை கொள்ளல், எப்பொழுதும் இளமையோடிருத்தல், பிறர் உடலிற் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்பில் அமர்தல், முதலிய சித்துக்களைத் தம் பாடலில் (தேசோ மயானந்தம் 8) குறிப்பிடுகின்றனர்.

பாம்பாட்டி சித்தர் குறிப்பிடும் சில சித்துக்களைக் கீழ்வரும் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;

கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;

கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பேர்

மூண்டெயும் அக்சினிக்குள் மூழ்கி வருவோம்;

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;

தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;

தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;

செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;

இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;

எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே
இராமலிங்க அடிகளார் சில சித்துக்களைப் பின் வரும் பாடல் அடிகளில் காட்டுகின்றார்.
''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்

கனிந்த கனியாகச் செய்யலாம்;
கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்
கரடி, புலி, சிங்கம் முதலா
வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்;
மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை
மேவு தேர் வடமாக்கலாம்;"
இங்ஙனம் சித்தர்கள் பல்வேறு வகையான சித்து விளையாடல்களை செய்தமையை மேற்குறிப்பிட்ட பாடல் வகள் தெவிக்கின்றன.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

அகத்தியர் துணை!

ஞானிகள் அருளிய அருட்கவிகள்
நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணர் காலாங்கி அன்பிற்
சிந்தில் அழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பயைருஞ் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர்சித்தர் பதினெண்பேர் பாதம்
சிந்தையுணிச் சிரத்தணியாச் சேர்த்தி வாழ்வாம்.
தனிப்பாடல் - 1.

மேற்கண்ட கவியின் சாரம் :
          ஆசான் நந்தீசர், மகான் அகத்தீசர், திருமூலதேவர், மகான் புண்ணாக்கீசர், பிரம்மமுனிவர், புலத்தீசர், ஆசான் பூனைக்கண்ணார், மகான் இடைக்காடர், ஜோதி ரி~pயாகிய போகர், மகான் புலிப்பாணி சித்தர், அருள்மிகு கருவூரார், வினை தீர்க்கும் கொங்கண மகரி~p, மகான் காலாங்கிநாதர், அழுகண்ண மகரி~p, அகத்தின் இயல்பை அறிந்த அகப்பைச் சித்தர், பக்குவமுடைய பாம்பாட்டி சித்தர், தெளிவுமிகு தேரைய மகரி~p, குணம் மிகுந்த குதம்பைச் சித்தர், தேகமென்னும் சட்டை நீக்கிய சட்டை முனிவர் மேற்கண்ட முத்தமிழ் வித்தகர்களாகிய பதினெட்டு சித்தர்களும் மகா அருள் வல்லவர்கள் ஆவார்கள். அவர்களை தினமும் வரிசைப்படுத்தி நாமஜெபம் செய்து வந்தால் பலபிறவிகளில் "யான்" என்ற கர்வத்தாலும், பொருள் வளமென்னும் செருக்காலும், ஆள்படை அகந்தையாலும் மற்றும் உத்யோக திமிராலும், பொல்லாத காமதேகத்தின் கொடுமையாலும், கொடிய சினத்தாலும் மேலும் புலால் உண்ணுதல், உயிர்க்கொலை செய்தல் போன்ற கொடிய பாவத்தாலும் வந்த கேடுகள் அத்தனையும், மேற்கண்ட ஞானிகளின் நாமத்தை சொல்லி வந்தால் பாவங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிவிடும்.
          மேலும் சிறப்பறிவு உண்டாகும். "நாம் யார்?" "நமது பிறவி என்ன?" "நமது பிறவியின் தன்மை என்ன?" "இந்த பிறப்பால் அடையக்கூடிய லாபநஷ்டமென்ன?" என்பதை அறிய முடியும். நஷ்டத்தை நீக்கி ஆன்ம லாபம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து வருகின்ற பிறவிக்கு அறியாமைதான் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆன்ம இயக்கமும், அதை தாங்குகின்ற உடம்பு பற்றியும், அந்த உடம்பால் வருகின்ற நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
          உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல). ஆகவே, மேற்கண்ட பதினெட்டு மகான்களை உருகி தியானம் செய்தால், நாம் ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ளலாம். எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!
அகத்திய மாரி~ நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)

ஷண்முகநாயகன் தோன்றிடுவான் – சிவ
சத்குரு நாயகன் தோன்றிடுவான் 
கண்களினால் கண்டு போற்றிடலாம் - கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக நாயகன்)

(Shanmuga nayagan - six faced hero will appear, siva satguru nayagan - the one who gave upadesam to sivam will appear, we can pray him seeing with our eyes, we can change the life-death cycle troubling us)
ஆனந்த மாமலர்ச் சோலையிலே மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே - எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக நாயகன்)
 
பக்குவமாம் தினைக்காட்டினிலே - அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே - அருள்
 மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக நாயகன்)
 
தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே - அவன்
சுற்றி சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே - தவ
 ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக நாயகன்)

 (Shanmugan round and dance, i.e. rotate and dance, which will rotate in us, our eyeball and which dances, the light from inside the pupil dances and our eyes are always in silence, mounam, we can make our eyes still and get the bliss of this greatest meditation)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே - பொருள்
 ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக்கடப்பவர் பக்தியிலே - தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக நாயகன்)

 (We can see the true form of God in the Shakthi - the ida kalai or Shakthi kalai or Chandra kalai, the real moon - the left eye's pupil light is the one which is called as nila, ida kalai, and one is really lucky if they start getting the increased effect in the power of light in their left side, which means their karma as starting to get melted with divine grace... through which automatically we will be able to see the true form of God - only through Shakthi..... this is what is again said in a famous pazha mozhi "Vidhiyai madhiyaal vellalaam.." what is this madhi? Not to misunderstand as our intelligence - but the real mathi, the real moon - the left side pupil light, the ida kalai...

Also, "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
 தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " - vallalar

"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது" - ஔவை குறள்.

சக்தியான சந்திரனை செங்கதிரோனான சிவம், இடது கண் ஒளியை வலது கண் ஒளி ஊடுருவ நமக்கு ஒளிக்கலைகள் ஒன்றாகி , ஒளிபெறுகி ஞானம் கிடைக்கும், நான் -ஆத்மா - உயிர் ஜீவன் - பிராணன் எது? எப்படி இருக்கிறது? எங்கிருக்கிறது? என்ன செய்கிறது ? இப்படி எல்லாவற்றையும் அறியலாம்! உணரலாம்! இதற்காக நாம் செய்வதே தவம்! திருவடி தீட்சை பெற்று சும்மா இருப்பதே தவம். )

வேதாந்த தத்துவ சாரத்திலே - அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலினி யோகத்திலே - பர
 மாத்ம ஜிவாத்ம வைபோகத்திலே (ஷண்முக நாயகன்)
 
அன்பர்க்கியற்றிடும் சேவையிலே - உயர்
 அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே - காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக நாயகன்)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே - ஒளி
 நக்ஷத்திரங்கள் இமைப்பினிலே
 விண்ணில் விரிந்துள்ள நீலத்திலே - மயில்
 மேல்வரும் ஆனந்த கோலத்திலே (ஷண்முக நாயகன்)

 (Stars are seen when we blink - understand where is the real sky where we can see the sun and the moon and the stars)

தேகவிசாரம் மறக்கையிலே - சிவ
 ஜீவவிசாரம் பிறக்கையிலே - ஆகும்
 அருட்பணி செய்கையிலே - கங்கை
 ஆறு கலந்திடும் பொய்கையிலே (ஷண்முக நாயகன்)

 (Again very well coded, gangai is again the ida kalai, it joins with the Poigai that is in the Agni kalai in the Atmastaanam, when this happens all the three kalais will be neutral and so at this stage one attains mukthi)

மானாபிமானம் விடுக்கையிலே - தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே குரு
 நாதனை நாடி துதிக்கையிலே (ஷண்முக நாயகன்)

 (Deepa aaraathanai , aarathi which we normally take outside to the lord automatically is seen inside after crossing stages interior which is the real beauty, azhagan, murugan, the real kaariya guru from then we dont need any karana guru for directing us and saving us from the karmas we did, from then it's the kaariya guru who automatically directs us...)

ஆடி வரும் நல்ல நாகத்திலே - அருள்
ஆறெழுத்தின் ஜெப வேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே - தன்னைக்
 கூப்பிடுவார் மனைவாயிலிலே (ஷண்முக நாயகன்)

 (Again here, beautifully interpreted, thannai koopiduvar manai vaayilile - he is visible in the entrance, the eyes is the gateway, so he is seen in the eyes....inside the eyeball, in the pupil as a sparkling star.... that's what he is mentioned as born in karthigai = kaar + Thee + Kai, this is also one deeper explanation... i.e. he is born in the black place(ofcourse eyeball is black, in kai = hands, in the kalais(Ida kalai(chandra kalai, vada kalai(Surya kalai), Agni kalai(Atmastaanam) as a thee - Fire, light(Jothi)).

This is what beautifully said in tamizh as "Agathin azhagu mugathil theriyum, i.e. the true beauty in heart(Irudayam = 2 udayam, the sun and moon light is from the atmastanam reaching the eyes as left and right eyes pupil light visible as sun and moon, the true meaning of irudayam.......) is seen in the face, where in the eyes.... what is the real beauty? Our uyir/our anma jothi is the true beauty that is present in atmastanam is seen in the face, in eyes in the pupils as light also through which we see the world, else we are blind....."

Also to find a person is good or not, they say in olden days, we can tell looking at the eyes... but how? Through the eyes, we can see their level of life force and the power in the pupil can show them as whether they are good or not. )
 
சித்தரின் ஞான விவேகத்திலே - அன்பர்
 செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே - அதன்
உட்பொருளாம் சிவஜோதியிலே (ஷண்முக நாயகன்)

அன்னை மடித்தல பிள்ளையவன் - சச்சி
 தானந்த நாட்டினுக் கெல்லையவன்
பன்னும் ஏகாக்ஷர போதனவன் - மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக நாயகன்)

 (Annai madithala pillai avan - meaning, he is the son of mother's lap, it's inner meaning is he is present in the place of vaalai, the agni kalai, the atmastanam, there he resides as a guru... once we catch him in the pupil, through the left eye power increasing(the right eye kalai automatically mingles with left, as the karmas melts, the ida kalai slowly joins with agni kalai and unites with the agni kalai and all 3 becomes neutral and then all is open to us through the grace of the true guru inside us....)

 செல்வம் எல்லாம் தரும் செல்வனவன் - அன்பர்
 சிந்தை கவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும் செஞ்சேவல் பாதகை உயர்த்திய
 வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக நாயகன்)

 (Alangaaranavan - where do we decorate? Eyes, kannuku mai azhagu..., so is coded as alangaaran)
 
சேர்ந்தவர்க் கென்றும் சகாயனவன் - அன்பர்
 தூயனவன் அன்பர் - நேயனவன்
 சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக நாயகன்)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால் வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
 விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய் வந்த
 விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக நாயகன்)

 (Once we start experiencing inside, we will go on seeing 5 faces, 5 colours after crossing all those 5, we will get the darshan of aarathi, that is the real murugan, who is the real guru ready to give us the gnanam completely)

முத்தொழிலாற்றும் முதற் பொருளாம் ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
 இத்தனி உண்மை மறந்தவனைச் சிறை
இட்டவனாம் பின்னர் விட்டனவாம் (ஷண்முக நாயகன்)

 (It is he the real Sadasiva moorthy,aadhi arunachala moorthy, infact, he is the one who gives upadesam to sivam itself, and he is seen in the pupil, surrender him... rest he will take care)

வள்ளி தெய்வானை மணாளனவன் - மண
 மாலை கொள் ஆறிரு தோளனவன்
 அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகல்
 ஆகம நான் மறை அந்தமவன் (ஷண்முக நாயகன்)

 (He is the root of the vedas..... what else greater way to explain about the greatness can be done by Agastiar about Shamuga nayagan)

கோலமுடன் காலை மாலையிலும் - இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
 ஓலையில் ஆணியை நாட்டு முன்னே- எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக நாயகன்)

 (Kindly understand the real meaning of kolam here, pls. Kolam and it's importance in self realization)

பேர்களெல்லாம் அவன் பெர்களன்றோ - சொல்லும்
பேதம் எல்லாம் வெறும் வாதமன்றோ
 சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால் - வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக நாயகன்)

 (The total secret is here.... interpret clearly... that's it... all is clear... "Sarvathelam arul endruthaal, i.e. arulai matum sarnthirunthaal, we can be out of life-death game....

meaning in deep: How to depend on arul, where is arul? Arul comes from God, he is in Atmastaanam, so, he is in the form of light, where can we see his light in light form... in the eyes, so the light in the pupil is the real blessing of god.... so, if we surrender there and do all our duties whatever we need to with the thoughts surrendered there, there is no more karma... all existing karmas can be cleared slowly by this meditation as well as accepting the things coming by surrendering to that true feet of lord in the pupil, things are done.....)
 
கும்பமுனிக்கருள் நம்பியவன் - அன்பு
 கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின் புறும்
ஜோதியவன் பரஞ் ஜோதியவன் (ஷண்முக நாயகன்)

Again here, Puruva mathi, the mid of the eyebrow, if we find the jothi there, then to be clear that it's the same jothi who is the paramatha also and to surrender him...

Where is the mid of the eyebrow.... clearly understand - the mid of the eyebrow, not the middle of both eyebrows..... the mid of the eyebrow is "Pupil inside the eyeball".... true or not.... It's the siva's real third eye.... if it's opened, everything will be possible then...

Vallalar calls it as "Nadukan puruva pootu".... he has asked to open it by at what so cost... It's that much important.... Nadukan - center Eye - Center of Eye - What is in the centre of eye? Eyeball and inside it is the pupil which is in the center.... So, Vallalar has asked us to open the pupil which is been locked by our previous karmas...

This is the meaning of the புறும் ஜோதியவன் பரஞ் ஜோதியவன்....

வெள்ளி, 2 ஜனவரி, 2015

காஞ்சிப்பெரியவரை பிரார்த்தித்தால் சிரமம் நீங்கும்!

மகான் காஞ்சிப்பெரியவர், புண்ணியசீலராக ஆன்மிக நிலையிலும், நடமாடும் நூலகமாக அறிவு நிலையிலும், கருணைக் கடலாக மனித வாழ்விலுமாக இருந்தவர். பல கோணங்களிலும் போற்றப்பட்ட  மஹான் அவர், மனித வடிவில் வந்த தெய்வம். அவரைப் பிரார்த்தித்தால் சிரமம்  நீங்கி நல்லது நடக்கும். அவர் காட்டிய வழியில் தர்மங்களைச் செய்வது தான் அவரை வழிபடுவதாகும்.

வியாழன், 1 ஜனவரி, 2015

சித்தத்தை அறிந்தவன் சித்தனாவான்.

 
மலமாயை உள்ளவனுடைய சித்தம் தெளிவாக இருக்காது, சித்தர் பெரு மக்கள் துணை கொண்டு மல மாயையை அறுக்காமல் மனமாசு நீங்காது. மனமாசு நீங்காது விட்டால் தெளிவான அறிவு இருக்காது. தெளிவான அறிவுள்ளவன் தான் உடம்பையும் உயிரையும் அறிவான். உடம்பையும் உயிரையும் சேர்த்து அவர்கள் துணை கொண்டு ஒரு வேதியல் செய்தால், உடம்போடு உயிரும் இரண்டறக் கலந்து விடும்.
    சராசரி மனிதனுக்கு உடம்பும் உயிரும் இணைந்திருப்பது போல் இருந்தாலும் உடம்பை விட்டு உயிர் போய் விடும். உடம்பையும், உயிரையும் சேர்த்து குருவின் துணை கொண்டு வேதியல் செய்தால் உடம்பை விட்டு உயிர் போகாது.  இதை அறிந்தவன் தான் சித்தனாவான். இந்த வேதியல் முறையை அறியாது விட்டால் மீண்டும் மீண்டும் பிறப்பான்.
    இதை அறிந்துகொள்ள, சித்தர்களின் திருவடியை பூஜிக்க வேண்டும். அவ்வாறு பூஜிக்க  பூஜிக்க  சித்தர் பெருமக்கள் நம் உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்போடும் ஊடுருவி இந்த தத்துவத்தை உணரச் செய்து அவரும் நாமும் இரண்டறக் கலப்பதற்கு அருள் செய்வர்.
    உடம்பு ஆதியில் அசைவற்ற பரப் பிரம்மத்திலிருந்து வந்து பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு பல்வேறு பிறவிகளுக்கு ஆட்பட்டு இயற்கையின் மீளா துன்பத்திற்கு ஆட்படுகிறது. ஆனால் ..........குருவருளின் துணை கொண்டு இந்த துன்பத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பரப் பிரம்மத்தை அடைவதே உண்மையான ஞானம் ஆகும். இதை உணர ஆசான் சித்தர்கள்  துணை வேண்டும். இதற்கு நல்வினை வேண்டும். உங்கள் அனைவருக்கும் அவர்கள் அருகாமை கிடைக்க மனசார வேண்டுகிறேன்...

போகரும் 63 சீடர்களும்

கருவூரார் மூல மந்திரம்
இரண்டு கதைகளுக்கு சான்று உள்ளது.ஒன்று தஞ்சை பெரியகோவிலின் சிலை நிறுவியவர் மற்றொன்று, சிதம்பரம் நடராஜர் சிலையை செய்தவர்.இரண்டும் போகரின் வழிகாட்டுதலால் செய்தார்.
இவர் அட்டமா சித்திகளை மக்களுக்கு எளிதில் போதிக்க எந்திர முறையை கையாண்டார்.அனைத்து சித்தர்களின் கோபத்திற்க்கு உள்ளாகி பிறகு போகர் தடுத்தாட்கொண்டு சில ஏடுகளை மட்டும் தந்தார்.அதை தான் நாம் இப்போதுகருவூரார் மாந்திரீக அட்டமா சித்து என்ற நூலாக படிக்கிறோம்.

இந்த நூலை மூடர்களுக்கு கொடுக்காதே என்று இந்நூலில்லேயே கூறுகிறார் .சித்தர்கள் வலைதளங்களை பார்வையிடுபவர்கள் மூடர்கள் அல்ல மேலும் அவர்கள் ஆசியால் தான் இவ்வலை தளங்களை பார்வையிடுகிறோம். 

கருவூரார்

சித்தர்களில் போகரின் இளைய தளபதி தான் கருவூரார்


கருவூரார் போகரின் சீடர்களில் ஒருவர்.போகருக்கு 63 சீடர்கள்,அதில் தலைமை பொறுப்பு கொண்டவர்கள் ஏழு பேர் ,அவர்கள் 

புலிப்பாணி,கருவூரார்,கோரக்கர்,கொங்கணவர்,யாகோபு,ரோமரிஷி,பாபாஜி நாகராஜ். இவர்களின் தலைமை குரு வேறொருவராக இருந்தாலும் போகரின் கீழ் அந்தந்த தலைமை குருவின் அறிவுறுத்துதலின் பேரில் போகரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.நவபாஷாண சிலை செய்வதில் பெரும் பங்கு கொண்டவர்கள் இந்த ஏழு பேர்,இதில் கருவூராரும் ஒருவர், இவரை பற்றி பல கதைகள் உண்டு.



போகரின் பிரதான ஏழு சீடர்கள்

புண்ணிய செயல்களின் விவரம்.....

1. தாய்-தந்தை செய்த உதவிகளை நன்றி மறவாது அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதே புண்ணியமாகும்.
2. மனைவி அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்தால் அதை மன்னித்து மறப்பது புண்ணியமாகும்.
3. ஒருவரிடம் வேலை வாங்கும் போது அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதும் புண்ணியமாகும்.
4. உற்ற நண்பர்களுக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்வது புண்ணியமாகும். விருந்தை உபசரித்து அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்வதும் புண்ணியமாகும்.
5. நமக்கு மனது சோர்வு இருந்தாலும், நம்மை நோக்கி வரும் அன்பர்களிடம் இனிமையாக பேசுவதும் புண்ணியமாகும்.
6. வரவுக்கு உட்பட்டு செலவு செய்ய வேண்டுமென்ற எண்ணமும் புண்ணியமாகும்.
7. ஜாதிதுவேசம் பார்க்காமல் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று எண்ணி அன்பு காட்டுவது புண்ணியமாகும்.
8. நாம் பேசும்பொழுது நமது பேச்சால் மற்றவர்கள் மனம் புண்படாது இருக்க வேண்டுமென்று நினைப்பது புண்ணயமாகும்.
9. நம்மீது பகை கொண்டவர்கள் நம்மிடம் வரும்பொழுது நாம் பகைஉணர்வை வெளிப்படுத்தாது இனிமையாக பேசுவது, அவர்களிற்குத் தேவையான உதவிகளை செய்வது  புண்ணியமாகும்.
10. எப்பொழுதும் உடன்பாடு உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவது எல்லோருக்கும் இயல்புதான். நம்மிடம் முரண்பாடு உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி பகைமையை நீக்கி கொள்வது புண்ணியமாகும்.
11. நம் சித்தர் பெருமக்களைத் தினமும் பூஜித்து வருவதும் புண்ணியமாகும். இயற்கை அன்னை நமக்கு தானியங்களையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும், பல்வேறு கனிகளையும் கொடுத்திருக்கின்றாள். இந்த உணவுவகைகள் போதாது என்று மற்ற உயிர்களை கொன்று அந்த உடம்பை உண்ணாதிருப்பது புண்ணியமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய அறிவே தெளிவில்லாமல் இருப்பதால் மேலும் போதை பொருட்களும் மற்றும் மதுபானம் அருந்தி அறிவை மாசுபடுத்திக்கொள்ளாதிருப்பதும் புண்ணியமாகும்.
12. வருகின்ற செய்திதாள்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை போன்ற செய்திகள் மிகுதியாக வருவதால் அதை படித்தால் மனம் அமைதி கெடும். எனவே அதை படிக்காதிருப்பது புண்ணியமாகும்.
13. பொருட்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்காமல் மாற்றி வைத்து விட்டு மற்றவர்கள் மேல் பழி சுமத்துவார்கள். மேலும், தம் வீட்டில் பொருள் காணாமல் போனால் சம்மந்தம் இல்லாதவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள். மேலும் காவல்துறையில் புகார் கொடுப்பார்கள். எதையும் நிதானித்து முடிவெடுப்பதே புண்ணியமாகும்.
14. அறப்பணி செய்வோருக்கு வீடு அவசியம் தான். அதற்காக பெரிய வீடாக கட்டி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல் இருப்பதும் புண்ணியமாகும்.
15. திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, திருவாசகம் போன்ற அறநூல்களை பயபக்தியுடன் தொடுவதும், படிப்பதும் புண்ணியமாகும்.
16. சாலையில் செல்லும் காலத்தில் ஆணி, உடைந்த கண்ணாடிகள், கற்கள், முட்கள், வாழைப்பழத்தோல் போன்றவை கிடக்கும் அதை அப்புறப் படுத்துவது புண்ணியமாகும்.
17. கண்ட இடங்களில் சுகாதாரகேடு வரும்படி அசுத்தம் செய்யாதிருப்பதும் புண்ணியமாகும்.
18. வாரம் ஒருநாள் ஆசான் அகத்தீசன் ஆசி பெறுவதற்காக காலையிலும் மாலையிலும் உணவு உண்ணாது மதியம் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணுவது புண்ணியமாகும்.
19. எல்லாம் வல்ல பரப் பிரம்மமாகிய மெய்ப் பொருளை அறியாத மூடர்களை காணாதிருப்பதும் புண்ணியமாகும்.
20. மெய்ப் பொருளை கற்றுணர்ந்த ஞானிகளுக்கு தொண்டு செய்து ஆசி பெறுவது புண்ணியமாகும்.
21. பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது புண்ணியமாகும்.
22. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கு தீமைகள் நீங்கி வாழ்வது புண்ணியமாகும்.
23. பொருளின் இயல்பே நிலையில்லாதது என்று அறிந்து பொருள் இருக்கும்பொழுதே அறப்பணி செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வது புண்ணியமாகும்.
24. நாம் காணுகின்ற அத்தனையும் அழியக் கூடியது என்று அறிந்து அதை கண்டு மயங்காது தெளிவடைவது புண்ணியமாகும்.
25. நாம் காணுகின்ற பொருள்களில் உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு. அதில் உண்மையை மட்டும் காண்பது புண்ணியமாகும்.
26. இந்த உடம்பு பொய் தான். அதில் உண்மைப்பொருள் இருப்பது அறிந்து அந்த உண்மைப் பொருளாக தாம் ஆகிவிடுவது புண்ணியமாகும்.
27. ஆன்ம நாட்டம் உள்ளவர்கள் உண்மை உணர்ந்த ஆசானை தேடி அலைவார்கள். அவர்களுக்கு உண்மை பொருள் உணர்ந்த ஆசான் கிடைத்தால் அதுவும் புண்ணியமாகும்.
28. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தீய நட்போடு சேர்ந்திருந்தாலும் அந்த நட்பு நம்மை விட்டு நீங்கி விடுவது புண்ணியமாகும்.
29. குடிப் பழக்க்ம், சூதாடும் பழக்கம் போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதும் புண்ணியமாகும்.
30. சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்கள் விரும்பினால் மறுமணம் செய்து வைப்பது புண்ணியமாகும்.
31. வியாபாரம் செய்யும் பொழுது நாம் விற்கக் கூடிய பொருட்களை நியாயமான விலைக்கு விற்பது புண்ணியமாகும்.
32. செத்துபிறக்கின்றவர்களை சமாதி வைத்து அதை பூஜை செய்யாதிருப்பதும் புண்ணியமாகும்.
33. நமக்கு தக்கசமயத்தில் உதவி செய்தவர்களை சாகும்வரை மறவாதிருப்பதும் புண்ணியமாகும்.
34. உண்மை பொருளறிந்த ஆசானுக்கு பண்புள்ள சீடன் அமைந்தால் அதுவும் புண்ணியமாகும்.
35. தகுதியுள்ள நண்பர்கள் சிலசமயத்தில் அறியாமையால் குற்றம் செய்தாலும் அதை அனுசரித்து நடப்பதும் புண்ணியமாகும்.
36. நமது செயல்பாடுகள் மற்ற உயிர்கள் மகிழ்ச்சியடையும்படி இருந்தால் அதுவும் புண்ணியமாகும்.
37. நமக்கு துன்பம் வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவி செய்தவர்களுக்கு நாம் பெற்ற கடனை திரும்ப கொடுத்து விடுவது புண்ணியமாகும்.
38. நமக்கு வீடு இல்லாத காலத்திலும், வியாபாரத்திற்கு கடை இல்லாத காலத்திலும், வாடகைக்கு வீடும் கடையும் கொடுத்து உதவியவர்களுக்கு அவர்களுக்கு தேவையான காலத்தில் கடை மற்றும் வீட்டை காலி செய்து கொடுப்பதும் புண்ணியமாகும்.
39. நமது வீட்டில் டேப்ரெக்கார்டர், ரேடியோ, டி.வி போன்றவைகளை பயன்படுத்தும் காலத்தில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சத்தம் அதிக என்று சொன்னால் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்வது புண்ணியமாகும்.
40. நாம் பேருந்தில் செல்லும் காலத்தில் கர்ப்பஸ்திரீகள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், கையில் குழந்தையோடு நின்று பயணம் செய்கின்றவர்களுக்கும், முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகட்கும், நாம் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டுக் கொடுப்பது புண்ணியமாகும்.
41. நமது வீட்டில் உள்ள பசு,ஆடு அல்லது எருமை பால் கறக்கும் முன்னர் கன்றுக்கு பால் விட வேண்டும் என்று நினைப்பது புண்ணியமாகும்.
42. தாய்ப் பால் இல்லா குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்ப்பால்போல் பாதுகாப்பதால் நாம் பசுவைப் பாதுகாப்பது புண்ணியமாகும்.
43. கடவுளால் படைக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி மற்றும் ஜீவராசிகளை கடவுளுக்கே வெட்டி பலி கொடுப்பது பாவமாகும். அதுபோன்ற காரியங்கள் செய்யாதிருப்பது, செய்வதைத் தடுப்பதும் புண்ணியமாகும்.
44. நாம் கற்றறிந்த உண்மையை மற்றவர்களுக்கு மனதில் பதியுமாறு சொல்வதும் புண்ணியமாகும்.
45. நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள் அனைத்தும் பிறரால் பழிக்கப்படாதிருப்பது புண்ணியமாகும்.
46. இறை மேல் பக்தி கொண்டவர்களுக்கும், சமூக சான்றோர்களுக்கும் உதவி செய்வது புண்ணியமாகும்.
47. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது பாவமாகும். கலப்படம் செய்யாதிருப்பது புண்ணியமாகும்.
48. சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்கள் சுபகாரியங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும், சுபகாரியங்களுக்குச் செல்லும் காலத்தில் அவர்கள் எதிரே வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சுபகாரியங்கள் தடைப் படும் என்றும் சொல்வது கருணை இல்லாத செயல்களாகும். அவ்வாறு அவர்கள் மனம் புண்படும்படி பேசாதிருப்பது புண்ணியமாகும்.
49. உண்மைப் பொருள் உணர்ந்த ஆசான் நமக்கு மனமுவந்து உபதேசித்தால் அது அளவில்லா புண்ணியமாகும்.
50. மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணம் மும்மலமாகிய களிம்புதான். களிம்பு அறப் பாடுபடுவது புண்ணியமாகும்.
51. கடவுளால் செய்யப்பட்ட திருக்குறளை தொட்டு வணங்குவதும், படிப்பதும், அதை பரப்புவதும் புண்ணியமாகும்.
52. குடும்பத் தலைவன் தன் மனைவியின் தாய், தந்தையாகிய மாமன், மாமிக்கு பாதுகாவலராக இருப்பது, அவர் தம் உற்றார் மகிழும்படி நடந்து கொள்வது புண்ணியமாகும். அதே போல குடும்பத் தலைவி தன் கணவனுடைய தாய், தந்தையாகிய மாமன், மாமி அவர் தம் உற்றார் மகிழும்படி நடந்து கொள்வது புண்ணியமாகும்.
53. ஆண்களை படைத்த அதே கடவுள் தான் பெண்களையும் படைத்திருக்கிறான். பெண்களை மதித்து நடப்பதே புண்ணியமாகும்.
54.இயற்கையை நேசித்து நடக்க வேண்டும், இயற்கையை பாதுகாக்க எம்மால் இயன்ற வரை பாடுபட வேண்டும்.       கழிவுகளை அதனதன் கழிவுக்குரிய இடங்களில் இட வேண்டும்.. ஏதோ  ஒரு உயிர் தான் அதனைக் கையாளப் போகிறதென்கிற உணர்வோடு குப்பையை வீசுங்கள்.. நாம் செய்யும் அந்தத் தவறை அனுபவிக்கும் இடத்தில் நாமே பிறக்கக் கூடும் என்கிற சிந்தனையை சிந்திப்போமானால், கண்டிப்பாக அதன் கஷ்டத்தை நாம் உணர்வோம்..
55. பறவைகளுக்கு, எறும்புகளுக்கும் ஆகாரம் கொடுங்கள்... ஒரு பருக்கை சோறுடைய அருமை எறும்புக்குத் தான் தெரியும்.. ஆகவே உணவை வீணாக்காதீர்கள்.. குப்பைத் தொட்டிக்குள் போடுவதை விட ஏதோ  ஒரு ஆத்மாவுக்கு பசியாற கொடுங்கள்..
56.தலை முடியை வெளியில் போடாதீர்கள், பறவைகளின் காலில் பட்டால் சிக்கிக் கொண்டு பரக்கவோம் இரையை தேடவோ முடியாது, பரிதாபமாக உயிரை இழக்கும்..(Bubble Gum) வெளியில் வீசினால், பறவை அதை உணவென்று சாப்பிட்டால் தொண்டைக்குள் சிக்கி இறந்து விடும்..

. மனித வர்க்கம் அத்தனையும் கடவுளால் படைக்கப் பட்டதாகும். எனவே, உள்ளும், புறமும் வேற்றுமையில்லாமல், சமமாக மதிப்பவர்கள் மனிதர்களில் தெய்வமாகும். அவர்களை கண்டு தரிசிப்பதே புண்ணியமாகும்.
மேற்கண்ட அனைத்து புண்ணிய செயல்களுக்கும் இறையின் ஆசி இருக்க வேண்டும்.
ஆகவே, சித்தப் பெருமக்களை மனசாரப் பூஜிப்போம்,
அவர்கள் ஆசி பெற்று இன்புற்று வாழ்வோம்!!!.