வியாழன், 19 ஜூலை, 2012

ஸ்ரீ கணபதி சுவாமிகள் (தென் காசி)

      தென் காசியில் சமாதி கொண்டு இன்றும் அருள் பலித்து வரும் கணபதி சுவாமிகள் அந்த இடத்தில அடங்கி 120 ஆண்டுகள் ஆகின்றனவாம் திருசெந்தூர் கோவிலை கட்டிய மூவர் சமாதிகள் கோவிலுக்கு தெற்கே கடற்கரையில் உள்ளன. அம்மூவருள் ஒருவராகிய மௌன குரு சுவாமிகளே ஸ்ரீ கணபதி சுவாமிகளின் குரு. சுவாமிகள் பரிபூரணமடைந்த விபரம் தெரிய வில்லை. நாள் நட்சத்திரம் தெரியா விடின் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பூஜை செய்தல் போதும் எனும் நியதிப்படி ஸ்ரீ கணபதி சுவாமிகளுக்கு மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் குரு பூஜை நடத்தபடுகிறது .


இவரது சமாதி கோயில் அமைந்துள்ள இடம் :
தென் காசியில் ப.எண் 104எ /2, பு.எண் 150 வாய்க்கால் பாலம் என்னும் முகவரியில் ஸ்ரீ முருகன் சிமெண்ட் டைல் வொர்க்ஸ் வளாகத்துள் சுவாமிகளின் சமாதிக்கோவில் உள்ளது கருவறையுள் இரண்டடுக்குகள் உள்ள பெரியதும் அதன் மேல் சிறியதுமான கருங்கல் மேடையே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது கிழக்கு நோக்கிய சன்னதி.