செவ்வாய், 5 நவம்பர், 2019

குருவே சரணம் குருவின் திருவடி சரணம்.



என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இதனை எழுதுகிறேன்.

வாசியோகத்தை பற்றி இதுவரை முறையாகப் பயிலாதவர்கள் அது என்ன வகையான யோக முறை என்று அறிந்திராமலும். மற்றும் அதைப்
பயிற்சி செய்து பார்க்காமலும் தங்கள் கருத்துக்களை முகநூலிலும் மற்றும் வலைத் தளத்திலும்  ஏற்றி வருகிறார்கள்.
வாசியோகம் பல வகைகளில் பல காலங்களில் இயற்றப்படுகிறது. முறையாக பயின்றவர் அதன் சக்தியை அடக்கியாள்வார்கள். நேரமும் காலமும் அதற்கு மிகப் பெரிய பலம்.  இதனை  என் குருவிடம் கண்டிருக்கிறேன். வாசியோகம் ஒரு சிலரால் மட்டுமே முறையாகத் தெளிந்த ஞானமுடையவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தர் கலையான இந்த யோகம் பல முறைகளில் கையாளப்படுகிறது. எதுவாகிலும். முறையான முதல் தவத்தில் அது காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. முதல் தவம் தவறானால் முற்றிலும் கோணம் எனக்கேற்ப. அடுத்த படிகள் சாதகனால் மட்டும் கடக்கப்படுகிறது. பின்னர் வருடங்கள் கூடக் கூட சாதகன் புவியீர்ப்பு  விசைவிட்டு வெளியேறிப் பறந்து விடுகிறான். தாங்கள் கூறும் வார்த்தைகள் சிதறி அங்குமிங்கும் பரவி அதனிடத்தில் ஒன்றி விடுகிறது. கிரகங்கள் அசையும் வகைக்கேற்ப சிதறியவகைகள் ஒன்றுகூடி பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகிறது.
Sage scientist தவவிஞ்ஞானி என்ற சொல் இப்பொழுது எல்லா யோக மையங்களிலும் உயர்த்தி ஒலிக்கப்படுகிறது. காரணம் காலம் கடந்து போய்விட்ட காரணத்தாலும் சொல்லிக்கொடுத்த தவங்கள் இறுதிக்குள்ளான பயனைக் கொண்டு வரவில்லை என்பதாலும் இவ்வாறு புதியதாக தவவிஞ்ஞானி என்ற சொல் முன்னிறுத்தப்படுகிறது. வெளிப்படையான காரணம் தவங்கள் முறையான அடுக்குகளில் பின்பற்றப் படவில்லை.

இயக்கமற்ற நிலையில் பயணிக்கும் யோகி எவ்வாறு இயக்கநிலையில் வேலை செய்யும் விஞ்ஞானி  அளவிற்கு தங்களை  கொண்டு வர முடியும்?. அவ்வாறு வந்தால் இருப்பு நிலை இரகசியங்களைப் பாதுகாத்து விடும். யோகி சமாதி நிலைக்குப் போகாமல் இறக்க நேரிடலாம். இயற்கை தங்களை ஆராய விடுவதில்லை. ஆகையால் இது தவறான வாதம். பெரியோர்  இதை அறி்ந்து  கொள்வீர்களாக.

முறையான தவங்கள் ஒருவரது சுயத்தை அழித்து விடும். வாழ்க்கையை புரட்டிப்போ ட்டு்விடும். வாழ்க்கையின் எல்லைவரை கொண்டுச் செல்லும் இயல்புடையது. யோகம் நம்மை உடைத்து எறிந்து விடும். விளிம்பு நிலைக்குக் கொண்டுப் போய் பயமுறுத்தும். படிப் படியாக தவம் கூடும் வருடங்களில் சாதகன் தன்னையிழந்து மிரண்டு போய்விடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். தாங்கள் தங்கள் கட்டுக்குள் இல்லை என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் தன்னை இயற்கையிடம் இழப்பதை தவிர வேறு மாற்று வழியே  அவனுக்கு  இருப்பதில்லை.

வாசியோகம் சாதகனை மயக்கமுறச் செய்து விடும். அண்டசராசரங்களைக் கட்டி ஆள்பவன்ஆகிறான் அவன். காலம் செல்ல அதன் அரண்கள் உடைத்தெறியும் போது தாங்கள் நினைப்பதை இயற்கை கேட்டு அதன் வழியில் தங்களுக்கு வழி விடுகிறது என்பதை உணர்ந்தே வருகிறான். மனப்  பிரமையில் ழூழ்கி விடுகிறான். இயற்கை தனக்கு கீழ்படியும் போது பயந்தேயிருக்கிறான்.
அவ்வாறு வருடங்களை யோகி சிறிது சிறிதாக இழந்து விடுகிறான். திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எல்லாம் இழந்து விட்டதாகவே உணர்கிறான். ஆகையால் யோகிகள் அன்பானவர்களைத்தவிர மற்றவரை  துாக்கியெறிந்து  விடுகிறார்கள்.

உண்மையான தவம் ஆளை சிதைத்தவிடும். சரியான வாசியோகம் செய்கிறவர்கள்.தனித்தேயிருக்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்பது தங்களை சுற்றி உள்ளது தங்கள் கட்டுக்குள் உள்ளது என்பதை உள்ளதை உணர்ந்த பின்பு அமைதியாக இருக்கவேண்டியுள்ளது என்பதே.

அன்பர்களே இதை எழுதுவது தாங்கள் உண்மையை உணர்ந்து அதன் வழியை வடித்தெடுத்துஉண்மை யோகத்தை கற்று உணர வேண்டியே எழுத நேர்ந்தது. 
உலகில் பல ஆன்மாக்கள் தோன்றி மறைகின்றன. பல ஆன்மாக்கள் கல்வி, செல்வம், புகழ், அரசியல், விஞ்ஞானம், தொழில் என்று பலவகையான விஷயங்களில் முன்னேறி தன் அனுபவங்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டுச் செல்கிறது. இதில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த வாழ்க்கையான ஆன்ம (ஞான) வாழ்க்கை தான் மிகப்பெரிதும் மதிக்கப்படுகின்ற வாழ்க்கையாகும்.
ஆகவே இந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை இவ்வுலகிற்கு பல ஞானிகள் வெளிப்படுத்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதனுடைய வாழ்க்கையையும், அறிவையும் மேம்படச் செய்வதற்காகத்தான், இந்த வகையில் நான் சொல்லப்போகும் விஷயங்கள் என்னுடைய ஆன்ம அனுபவத்தால் அறிந்த விஷயங்கள். ஆகவே நான் சொல்லப்போகும் இவ்விஷயங்கள் உலகத்தின் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ எதிரான விஷயம் அல்ல. இது முற்றிலும் ஆன்மாவின் அனுபவமும், ஆன்ம ரகசியமும் ஆகும். எல்லோரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதைபற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் கடமையாகும். நானும் இந்த ஆன்ம இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு சொல்ல விரும்புகிறேன்.