வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கோயிலும் மனிதனும்

கோயில் எதை வைத்து உருவானது என்றால், மனித உருவத்தை வைத்தே வடிவமைக்கப் பட்டது. 33 கோடிதேவர்கள் என்கிறோம். அது நமது உடலில் 33 கோடி சக்திகள் இருக்கிறது. ஒவ்வொரு சக்தியின் பெயர் தான் நாம் கோயிலில் பார்ப்பது, பலதெய்வங்களாக. 

அந்தச் சக்தியைத் தூண்டினால் மனிதனே கோயிலாக மாறி விடலாம். அந்தச் சக்தியை சாதாரண மனிதனும் பெற்று நன்மை அடையட்டுமென்று அமைக்கப்பட்டது தான் கோயில். நமது உடலில் முக்கியமான சக்தியாக இருப்பவை 6 சக்தி. அந்த 6 சக்தியைத் தான் நாம் ஆறு சக்கரங்கள்

என்கிறோம். அவை ( மூலாதாரம். சுவாதிஷ்டானம். மணிபூரகம். அனாகதம். விசுத்தி. ஆக்ஞை. எனப் படும் ஆறு சக்திமையங்கள். இவை 6 சக்திகளும் சுழன்று கொண்டிருப்பதால் சக்கரம் என்கிறோம்.  இவை ஆறையும் முறையாகத் தூண்டி விட்டால் நாம் 33 கோடி சக்திகளையும் அடைந்து விடலாம். அதனால் தான் சித்தர்கள் சாதாரண மனிதன்,  இந்தச் சக்திகளின்  நன்மைகளைப் பெற்று, அவர்களும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக அமைக்கபட்டதே கோயில் முன்வாசல், கோபுரம், நமது பாதம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரமும் தனித் தனி மையமாகக்  கோவிலில் காணலாம். அவை( கர்ப்பக் கிரகம். அர்த்தமண்டபம். மகாமண்டபம்.  அபிஷேக மண்டபம். அலங்கார மண்டபம். சபா மண்டபம்)  எனப்படுபவை.  இவைகள் இக்காலத்துக் கோயில்களில் காணப்படுவதில்லை.  பழங்காலக்  கோயில்களில்  காணமுடியும்.

சிலர் கோயில் கொடி மரத்தை ஆண்குறி என்கிறார்கள்.  உண்மையில் அது ஆண் குறியல்ல. அது நமது முதுகு எலும்பு. 
இந்த முறையில் அமைக்கபட்ட பழங்கால கோவில்கள் சக்தி வாய்ந்தவை. காரணம், இயற்கையாகவே பூமியில் சில இடங்களில் மின்காந்த சக்தி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அந்த இடத்தில் கோயில்களை அமைத்தார்கள்.  அந்த இடத்திற்கு பிணி உள்ளவரோ அல்லது மனச் சஞ்சலத்துடன் வந்தால் அந்த சக்தியானது நமது உடலில் புகுந்து சக்கரங்களில் சக்தி இயக்கத்தை இயக்கும்.

அதன் பிறகு அந்தக் குறை நம்மை விட்டு நீங்கி விடும். இதனால் தான் அம்மை போன்ற வியாதி வருபவரை கோயிலில் தங்க வைத்து தீர்ந்ததும் அழைத்து வருவது.

இந்த சக்தியானது மனித உடலில் எப்படிசெல்கிறது என்றால் நமது மார்பகத்தில் இருக்கும் விசுத்தி என்கிற சக்கரத்தின் வழியாக,  இந்தச் சக்கரமானது எந்த வித சக்தியானாலும் உள் இழுக்கும் தன்மையுடையது.  இதனால் தான் கோயில் உள்ளே போனால், ஆண்கள் சட்டையைக் கழட்டிவிட்டுப் போக வேண்டும் என்பது. 

பெண்களுக்குத் தங்கத்தில் தாலி போட்டிருப்பதால் அந்தத் தாலியானது அந்தச் சக்தியை ஈர்த்துக் கொள்ளும். இதை வைத்துத் தான், தூங்கும்போது மார்பில் கை வைத்து படுக்கக் கூடாது என்பார்கள்.  இரவில் நமக்கு சில இயற்கையின் சக்திகள் கிடைக்கிறது. அதை நமது உடலுக்குப் போகாமல் நாம் கை வைத்து அடைத்து விடுவோம். இதுவே காரணம்.

இந்த வகை சக்தி இயற்கையாகவே ஒருகாயில் இருக்கிறது என்றால் அது தான் உருத்திராடசம்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

நீ நீயாகவே இரு

சித்தர்களின் ரகசியமான ஒன்றில் சாகாக் கலை என்பதும் ஒன்று. அது அவ்வளவு சீக்கிரம் போலிகளின் கையில் கிடைப்பது கஷ்டம். அப்படியும் கிடைத்து விட்டால் அது போலிகளின் பாக்கியம் என்று கூட சொல்லலாம். இந்தப் பிறவியில் அப்படிக் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஆன்மாவை மீண்டும் பிறக்காமல் ஆக்குவதற்ச் செல்வது நல்லது. அதைத் தவற விட்டு விட்டு வேறு பாதையில் போய்ப் பலவித்தைகளைக் கற்றுக் கொண்டு சாகாக் கலையை மறந்து விட்டால் திரும்ப மறு ஜென்மத்தில் கிடைப்பது கஷ்டம்.


சாகாகலையைச் செய்து தேர்ச்சியடையும் முன் அவர் காலமாகி விட்டால் திரும்பவும் பிறந்து சாகாக் கலையில் விட்ட படியிலிருந்து தொடங்குவார்கள் இது சத்தியம்.

சித்தக் கலையில் சாகாக்கலையும்,  கண்னையும் உன்னையும் பற்றி பயிற்சி தரவில்லை என்றால் அவர் உண்மையான குரு அல்ல. இந்த மூன்றையும் தந்து விட்டால் அவரே சிறந்த குரு. அவரை சாகும் வரை பிடித்துக் கொள்ளுங்கள். அது உங்களைச் சாகவிடாது.

குருவிற்கு செய்யும் முதல் துரோகம் குரு கற்பித்த கலையை மறப்பது.
குரு சீடனுக்கு செய்யும் துரோகம் தேவையில்லாத வேலைக்கு உள்ளாக்குவது. குரு இறைக்கு செய்யும் பாவம் சீடனுக்குத் தேவையான பயிற்சியை தராமல் மறைத்து வைத்திருப்பது.

குரு சீடர்களுக்கு கற்பிக்கப் படும் கல்வியை இறைக்கு செய்யும் பணிவிடையாக நினைத்து எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் தரும் கல்வியே இறைத் தொண்டாகும்

சீடன் குருவிற்கு செய்யும் காணிக்கை தீய செயலையும் தீமையை நாடாமல் இருப்பதுவே முதல் குரு காணிக்கையாகும். இரண்டாவதுவே பணம், இத்யாதி எல்லாமும்.  

ஆகவே நல்ல குருவை தேடிக்கொள்ளுங்கள், ஞானம் பெற்று வாழுங்கள் !!!