சனி, 1 ஆகஸ்ட், 2020

நீ நீயாகவே இரு

சித்தர்களின் ரகசியமான ஒன்றில் சாகாக் கலை என்பதும் ஒன்று. அது அவ்வளவு சீக்கிரம் போலிகளின் கையில் கிடைப்பது கஷ்டம். அப்படியும் கிடைத்து விட்டால் அது போலிகளின் பாக்கியம் என்று கூட சொல்லலாம். இந்தப் பிறவியில் அப்படிக் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஆன்மாவை மீண்டும் பிறக்காமல் ஆக்குவதற்ச் செல்வது நல்லது. அதைத் தவற விட்டு விட்டு வேறு பாதையில் போய்ப் பலவித்தைகளைக் கற்றுக் கொண்டு சாகாக் கலையை மறந்து விட்டால் திரும்ப மறு ஜென்மத்தில் கிடைப்பது கஷ்டம்.


சாகாகலையைச் செய்து தேர்ச்சியடையும் முன் அவர் காலமாகி விட்டால் திரும்பவும் பிறந்து சாகாக் கலையில் விட்ட படியிலிருந்து தொடங்குவார்கள் இது சத்தியம்.

சித்தக் கலையில் சாகாக்கலையும்,  கண்னையும் உன்னையும் பற்றி பயிற்சி தரவில்லை என்றால் அவர் உண்மையான குரு அல்ல. இந்த மூன்றையும் தந்து விட்டால் அவரே சிறந்த குரு. அவரை சாகும் வரை பிடித்துக் கொள்ளுங்கள். அது உங்களைச் சாகவிடாது.

குருவிற்கு செய்யும் முதல் துரோகம் குரு கற்பித்த கலையை மறப்பது.
குரு சீடனுக்கு செய்யும் துரோகம் தேவையில்லாத வேலைக்கு உள்ளாக்குவது. குரு இறைக்கு செய்யும் பாவம் சீடனுக்குத் தேவையான பயிற்சியை தராமல் மறைத்து வைத்திருப்பது.

குரு சீடர்களுக்கு கற்பிக்கப் படும் கல்வியை இறைக்கு செய்யும் பணிவிடையாக நினைத்து எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் தரும் கல்வியே இறைத் தொண்டாகும்

சீடன் குருவிற்கு செய்யும் காணிக்கை தீய செயலையும் தீமையை நாடாமல் இருப்பதுவே முதல் குரு காணிக்கையாகும். இரண்டாவதுவே பணம், இத்யாதி எல்லாமும்.  

ஆகவே நல்ல குருவை தேடிக்கொள்ளுங்கள், ஞானம் பெற்று வாழுங்கள் !!!