செவ்வாய், 5 நவம்பர், 2019

குருவே சரணம் குருவின் திருவடி சரணம்.



என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இதனை எழுதுகிறேன்.

வாசியோகத்தை பற்றி இதுவரை முறையாகப் பயிலாதவர்கள் அது என்ன வகையான யோக முறை என்று அறிந்திராமலும். மற்றும் அதைப்
பயிற்சி செய்து பார்க்காமலும் தங்கள் கருத்துக்களை முகநூலிலும் மற்றும் வலைத் தளத்திலும்  ஏற்றி வருகிறார்கள்.
வாசியோகம் பல வகைகளில் பல காலங்களில் இயற்றப்படுகிறது. முறையாக பயின்றவர் அதன் சக்தியை அடக்கியாள்வார்கள். நேரமும் காலமும் அதற்கு மிகப் பெரிய பலம்.  இதனை  என் குருவிடம் கண்டிருக்கிறேன். வாசியோகம் ஒரு சிலரால் மட்டுமே முறையாகத் தெளிந்த ஞானமுடையவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தர் கலையான இந்த யோகம் பல முறைகளில் கையாளப்படுகிறது. எதுவாகிலும். முறையான முதல் தவத்தில் அது காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. முதல் தவம் தவறானால் முற்றிலும் கோணம் எனக்கேற்ப. அடுத்த படிகள் சாதகனால் மட்டும் கடக்கப்படுகிறது. பின்னர் வருடங்கள் கூடக் கூட சாதகன் புவியீர்ப்பு  விசைவிட்டு வெளியேறிப் பறந்து விடுகிறான். தாங்கள் கூறும் வார்த்தைகள் சிதறி அங்குமிங்கும் பரவி அதனிடத்தில் ஒன்றி விடுகிறது. கிரகங்கள் அசையும் வகைக்கேற்ப சிதறியவகைகள் ஒன்றுகூடி பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகிறது.
Sage scientist தவவிஞ்ஞானி என்ற சொல் இப்பொழுது எல்லா யோக மையங்களிலும் உயர்த்தி ஒலிக்கப்படுகிறது. காரணம் காலம் கடந்து போய்விட்ட காரணத்தாலும் சொல்லிக்கொடுத்த தவங்கள் இறுதிக்குள்ளான பயனைக் கொண்டு வரவில்லை என்பதாலும் இவ்வாறு புதியதாக தவவிஞ்ஞானி என்ற சொல் முன்னிறுத்தப்படுகிறது. வெளிப்படையான காரணம் தவங்கள் முறையான அடுக்குகளில் பின்பற்றப் படவில்லை.

இயக்கமற்ற நிலையில் பயணிக்கும் யோகி எவ்வாறு இயக்கநிலையில் வேலை செய்யும் விஞ்ஞானி  அளவிற்கு தங்களை  கொண்டு வர முடியும்?. அவ்வாறு வந்தால் இருப்பு நிலை இரகசியங்களைப் பாதுகாத்து விடும். யோகி சமாதி நிலைக்குப் போகாமல் இறக்க நேரிடலாம். இயற்கை தங்களை ஆராய விடுவதில்லை. ஆகையால் இது தவறான வாதம். பெரியோர்  இதை அறி்ந்து  கொள்வீர்களாக.

முறையான தவங்கள் ஒருவரது சுயத்தை அழித்து விடும். வாழ்க்கையை புரட்டிப்போ ட்டு்விடும். வாழ்க்கையின் எல்லைவரை கொண்டுச் செல்லும் இயல்புடையது. யோகம் நம்மை உடைத்து எறிந்து விடும். விளிம்பு நிலைக்குக் கொண்டுப் போய் பயமுறுத்தும். படிப் படியாக தவம் கூடும் வருடங்களில் சாதகன் தன்னையிழந்து மிரண்டு போய்விடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். தாங்கள் தங்கள் கட்டுக்குள் இல்லை என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் தன்னை இயற்கையிடம் இழப்பதை தவிர வேறு மாற்று வழியே  அவனுக்கு  இருப்பதில்லை.

வாசியோகம் சாதகனை மயக்கமுறச் செய்து விடும். அண்டசராசரங்களைக் கட்டி ஆள்பவன்ஆகிறான் அவன். காலம் செல்ல அதன் அரண்கள் உடைத்தெறியும் போது தாங்கள் நினைப்பதை இயற்கை கேட்டு அதன் வழியில் தங்களுக்கு வழி விடுகிறது என்பதை உணர்ந்தே வருகிறான். மனப்  பிரமையில் ழூழ்கி விடுகிறான். இயற்கை தனக்கு கீழ்படியும் போது பயந்தேயிருக்கிறான்.
அவ்வாறு வருடங்களை யோகி சிறிது சிறிதாக இழந்து விடுகிறான். திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எல்லாம் இழந்து விட்டதாகவே உணர்கிறான். ஆகையால் யோகிகள் அன்பானவர்களைத்தவிர மற்றவரை  துாக்கியெறிந்து  விடுகிறார்கள்.

உண்மையான தவம் ஆளை சிதைத்தவிடும். சரியான வாசியோகம் செய்கிறவர்கள்.தனித்தேயிருக்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்பது தங்களை சுற்றி உள்ளது தங்கள் கட்டுக்குள் உள்ளது என்பதை உள்ளதை உணர்ந்த பின்பு அமைதியாக இருக்கவேண்டியுள்ளது என்பதே.

அன்பர்களே இதை எழுதுவது தாங்கள் உண்மையை உணர்ந்து அதன் வழியை வடித்தெடுத்துஉண்மை யோகத்தை கற்று உணர வேண்டியே எழுத நேர்ந்தது. 
உலகில் பல ஆன்மாக்கள் தோன்றி மறைகின்றன. பல ஆன்மாக்கள் கல்வி, செல்வம், புகழ், அரசியல், விஞ்ஞானம், தொழில் என்று பலவகையான விஷயங்களில் முன்னேறி தன் அனுபவங்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டுச் செல்கிறது. இதில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த வாழ்க்கையான ஆன்ம (ஞான) வாழ்க்கை தான் மிகப்பெரிதும் மதிக்கப்படுகின்ற வாழ்க்கையாகும்.
ஆகவே இந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை இவ்வுலகிற்கு பல ஞானிகள் வெளிப்படுத்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதனுடைய வாழ்க்கையையும், அறிவையும் மேம்படச் செய்வதற்காகத்தான், இந்த வகையில் நான் சொல்லப்போகும் விஷயங்கள் என்னுடைய ஆன்ம அனுபவத்தால் அறிந்த விஷயங்கள். ஆகவே நான் சொல்லப்போகும் இவ்விஷயங்கள் உலகத்தின் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ எதிரான விஷயம் அல்ல. இது முற்றிலும் ஆன்மாவின் அனுபவமும், ஆன்ம ரகசியமும் ஆகும். எல்லோரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதைபற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் கடமையாகும். நானும் இந்த ஆன்ம இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு சொல்ல விரும்புகிறேன்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

சித்தர்களின் மூலிகை

தனி மூலிகைக்  காயகற்பம் 
சித்தர்கள் காயகற்பங்களை உண்டு தங்களின் உடலுக்கு நோய்கள் வராமலும், தங்களின் உடலை வலுவூட்டவும் செய்தனர். தனி மூலிகைகளைக் கொண்டே காயகற்பம் செய்தனர். அவ்வாறு சித்தர்கள் எடுத்துக்கொண்ட சித்தர்களின் மூலிகை காயகற்பங்களாவன:
அகத்தியர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கோரக்கர் கஞ்சா மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கஞ்சா மூலிகை உட்பட 90 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

நந்தீசர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ரோமரிசி 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

குகைகன்னார் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

மச்சமுனி வல்லாரை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், வல்லாரை மூலிகை உட்பட 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ராமதேவர் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர், முக்கிய மூலிகையாக கருநீலி கற்பம் உண்டார்.

திருமூலர் 66 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

போகர் கொல்லங்கோவை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கொல்லங்கோவை மூலிகை உட்பட 44 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

சட்டமுனி 21 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கொங்கணர் பொற்றிலைக்கையான் மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், பொற்றிலைக்கையான் மூலிகை உட்பட 16 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

காளங்கிநாதர் சிவகரந்தை மூலிகையை கற்பம் செய்து உண்டவர். 

சிவயோகி கரிசாலை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

கஞ்சமலை கருநீலி மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.

பதஞ்சலி செருப்படை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

பத்தர் செங்கற்றாழையை கற்பம் செய்து உண்டவர்.

நரை, திரை, மூப்பு, சாக்காடு வெல்ல தமிழ் சித்தர்கள் பல அரிய மூலிகைகளை பயன்படுத்தினர். மக்கள் நலனுக்காக சில மூலிகைகளின் பெயர்களை இங்கே தொகுத்துள்ளோம். இதன் அடையாளங்கள், பண்புகள் மற்றும் குணப்படுத்தும் நோய்களை வெகு விரைவில் அளிக்கப்படும்.

அழுகண்ணி
தொழுகண்ணி
கணைஎருமை விருட்சம்
தில்லை விருட்சம்
சதுரமரம்
தும்புராமரம்
அரி நெல்லிமரம்
சரள தேவதாருமரம்
சோதி விருட்சம்
கருவாழை
கருஊமத்தை
மலை அரளி
பப்பரப்புளிய மரம் - பஞ்சவேதி
சோம விருட்சம்
எட்டி மரம்
வெள்ளெருக்கு மரம்
சிகப்பு கீழ்க்காய் நெல்லி
குங்கிலிய மரம்
தான்றி மரம்
காயா மரம்
சிகப்பு தூதுவேளை
செங்கரிப்பான்
சர்க்கரை வேம்பு
வன்னி மரம்
தேவதாருமரம்
இந்திர வீர மரம்
வேம்பின் மேற் புல்லுருவி
கல்லத்தி மரம்
குருக்கத்தி மரம்
சேங்கொட்டை மரம்
சீந்தில் கொடிகள்
வேர்ப்பலா மரம்
கருங்கொடு வேலி
கருந்துத்தி
செந்தகரை
செங்கடுக்காய் மரம்
வெள்ளைப் பணல் முருங்கை
பேய்ச்சுரை
குருவரிக்கற்றாழை
மஞ்சள்பூ தைவேளை
செங்கற்றாழை
செந்நாயுருவி
அமிர்தவள்ளி
உரோம விருட்சம்
கருநெல்லி மரம்
நாகப்படக் கற்றாழை
வெண்நாவல்
வனப்பிரமி
முப்பிரண்டை
கரிப்பான்
சோதிப் புற்கள்
சிவந்த இலைக்கள்ளி
செங்கொடிவேலி
சாயா விருட்சம்
சேர்ந்தாடும் பாவை
பஞ்சதரு
சஞ்சீவி மூலி
உரோம வேங்கை மரம்
இருப்பவல் செடி
கணங்க விருட்சம்
பவளத்துத்தி
கருநொச்சி
கருநாரத்தை
நாகதாளி
சிவந்தபுனல் முருங்கை
பால்ப்பட்டை
அகில் மரம்
பாதிரி மரம்
கடுக்காய் மரம்
தேற்றான் மரம்
கரப்புன்னை
கல் தாமரை
முண்டக விருட்சம்
சிறியா நங்கை
ஆயில் மரம்
மயிலை மரம்
பிறாய் மரம்
கெட்டிவஞ்சி மரம்
கொஞ்சி மரம்
தொனியா மரம்
பிர்மதரு
கருக்குவாச்சி மரம்
ஊக்குணா மரம்
கைவலாக்கை மரம்
கணங்க விருட்சம்
பொற் சீந்தில்
வெண் துத்தி
திருகுக்கள்ளி
மிளகரணை
கானற்பலா 
வெள்ளை வேம்பு
இரத்தப்பலாசு மரம்
நேத்திரஞ்சிமிட்டி
வல்லாரை
சிவனார் வேம்பு
வெள்ளை நீர்முள்ளி
ஓரிலை தாமரை
பூமி சர்க்கரைகிழங்கு
ஆடு தின்னாப்பாளை
ஆடாதோடை
சீதா செங்கழுநீர்
செவ்வாழை
நெல்லி மரம்
வேலிப்பருத்தி கொடிகள்
துத்திச்செடிகள்
சத்திரப்பூடு
பொற்றலைக்கையான்
பாற்சொரி மரம்
வரை ஆலமரம்
செவ்வள்ளிக்கொடி
பலூனி மரம்
செங்கும்ரி வரை ஆலமரம்
கருங்கரிப்பான்
செந்தும்பை
கருந்தாமரை
குமரிக்கற்றாழை
பொற்பூ தைவேளை
நாகதாளிக்கள்ளி

அதிகாயசித்தி மூலிகைகள்:

பொற்சீந்தில்
விழுதி இலைக்கிழங்கு
பேய்ச் சுரை 
சர்க்கரை வேம்பு 
கருப்புச்சித்திர மூலம்
வெள்ளைப் பூ தூதுவேளை 
பேய்க்கடலை
கருமருது 
கருஞ்சிற்ற கத்தி 
கரு நெல்லி 
நாகதாளி 
நாறுகரந்தை
மால்தேவிவிதை