திங்கள், 15 ஜூலை, 2013

சிவவாக்கியர் - வள்ளலார்

அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து. - வள்ளலார்

நேத்திரங்கள் என்றால் கண்கள். சாத்திரங்களை நாம் உண்மை அறியாது படிப்போமானால்
 நமக்கு தடுமாற்றமே உண்டாகும்-புரியாது. ஆனால் கண்களாகிய சிற்றம்பலத்தில் குடியிருக்கும் இறைவனை அறிந்து பார்த்தோமானால் கண்கள் நமக்கு அனைத்தையும் அறிவிக்கும். எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இந்த உலகத்தையும் இது
 போன்ற பற்பல உலக நிலையும் நமக்கு உணர்த்தும், நாமும் உணரலாம் - ஞானமடயலாம். பரிபூரண அறிவு பெறலாம்.