வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கர்மவினையை நீக்கிட ஒரு சுலப வழிமுறை:யோகி கைலாஷ்நாத்

 

சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல்  இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம்,சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும், 12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு ஒருபோதும் விலகுவதில்லை;எனவே தான் பிறந்த நட்சத்திரம்,ராசி,லக்னத்துக்கேற்ற ஜீவசமாதிகளுக்குச் சென்று  வழிபாடு செய்ய வேண்டும்.
பழனிக்கு மாலை போட வேண்டும் என்றோ,காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ நினைத்தால், பழனியில் நிர்விகல்ப சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள் ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும் சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால் அவ்விடத்துக்குச் செல்ல முடியும்.
ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷ விடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால் விளங்கும்.
தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம், திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை, ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.சித்தர்கள் கண்ட அருந்தவ யோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.
ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும்,அதில் ஜொலிப்பவர்கள் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருப்பதும்; ஜொலித்துக்கொண்டே இருப்பவர்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவதும் வானியலோடும்,சோதிடத்தோடும் ,சித்தர் மகான்களின் சாபங்களோடும் தொடர்புடையதுதான்.ஒரு சில குடும்பங்கள் ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும்,மற்றும் தனிமனிதனின் சகல தோஷங்களுக்கும் காரணமாக இருப்பதும் வானியல்,சோதிடம்,கர்மா,சித்தர் சாபம் போன்ற இந்த நான்கு மட்டுமே!!
உதாரணமாக கோவையின் ஸ்ரீஅன்னபூர்ணா உணவகங்களும், சென்னையின் ஸ்ரீசரவணபவன் ஹோட்டல்களும்,சென்னை சில்க்ஸ் = சங்கிலித்தொடர் ஜவுளிக்கடைகளும்,அருப்புக் கோட்டையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தின் போக்குவரத்துத் துறையில் தனி முத்திரை பதிக்கும் ஸ்ரீஜெயவிலாஸ், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து ஆசியாவின் இருசக்கர வாகனச் சந்தையைக் கைப்பற்ற விஸ்வ ரூபமெடுக்கும் டி.வி.எஸ். என்று பல நிறுவனங்களின் தொழில்களைச் சொல்லலாம்.
குண்டலினி சக்தியை எழுப்பியவர்கள் மட்டுமே சோதிடத்தில் வல்லுநர்களாக இருக்க முடியும்.அவர்களால் மட்டுமே சூரியக் குடும்பத்தையும்,நட்சத்திரங்களையும், 12 ராசி வீடுகளையும் ஞானக்கண்ணால் காணமுடியும்.