செவ்வாய், 13 டிசம்பர், 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்!!!

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது

பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம்

ங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இது தான்

இத்தலத்தில் தான் திருப்புகழ்கந்தர் அனுபூதி,திருவெம்பாவை

திருவம்மானைஅருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்திதலம்தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன்திருமாலின்ஆணவம் அழிந்த தலம்அர்த்தநாரீஸ்வரர் 

கோலம் கொண்ட தலம்கார்த்திகை தீபத்தின்மூலத் தலம்ஆதாரத் 

தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால்இது உலகப் புகழ்பெற் தலம்
நகரின் மையத்தில்மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளதுஆலயத்தில்ஒன்பது கோபுரங்கள் உள்ளனகோபுரங்கள் மலிந்த ஆலயம் இதுஇவ்வாலயத்தின்உள்ளே ஆறு 

பிரகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம்அதனடியில் பாதாள 

லிங்கம் (பால ரமணர்தவம் செய்த இடம்), 3 செப்புச் சிலைகள்கல்யாண மண்டபம்அண்ணாமலையார் பாதமண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம்பிரம்ம தீர்த்தம் என்ற  இரு பெரிய குளங்கள்

உள்ளனகொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். 

பஞ்ச லிங்கங்களும்நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளனகாலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில்  வணங்கப்

பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந்தாண்டான்அதற்காக முருகன் அருணகிரிக்கு 

கம்பத்தில் காட்சி தந்தார்இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு

மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது,

தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதிபிச்சை இளையனார் சந்நிதிகிளிகோபுரம் அருகேயுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்ஆடிப்பூரத்தன்று 

மாலைஆலயத்தின்உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா

நடத்தும் ஆலயமும் இதுஒன்றுதான்திருவிழா நாட்களில் திட்டி 

வாசல் வழியே உற்சவ மூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம்கிளி கோபுரம் (81 அடிஉயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடிஉயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடிஉயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்
சி தருகிறார்இதை காந்த மலை என்பர்காரணம்

இம்மலையை தரிசிக்க ருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து 

இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும்

திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும்இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும்பல சந்நிதிகளும்அஷ்டலிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்அடிக்கு 1,008 லிங்கம்

அமைந்துள்ளது என்பர்மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொருவகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் 

ண்களை அன்னைபராசக்தி விளையாட்டா மூடியதால் இப்பிரபஞ்சமே 

இருண்டதுஅனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தனஇதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க

பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் 

இருந்தாள்ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் 

தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு 

சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை 

சிவபெருமான் நீக்கினார்அய்யனே நீங்கள் எப்போதும் என்னைப் 

பிரியாதிருக்க தங்கள் திருமேனியில்எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என 

சக்தி வேண்டினார்அதற்கு சிவபெருமான்,அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும்கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி 

ன்று உண்டானதுஅப்போது ‘மலையைடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்ததுஅதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது 

மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக 

காட்சியளித்தார்இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது

மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோதுஅருகிலிருந்த சிறுபாலகனான 

பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லைகாரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்

அப்போது பெய்த அமுத மழைத்துளி மலை மீது பட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்க பலம் கொடுத்ததால் தான் 

இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும்மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால்,அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்-நேர்க்கோட்டில் இருக்காதுஇதன்வழியே படுத்து நெளிந்துவளைந்து தான் வெளிவரவேண்டும்இதனால் குழந்தைப்பேறு கிட்டும்கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம்

தெற்கே எமலிங்கம்தென்மேற்கே நிருதிலிங்கம்மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம்வடக்கே குபேரலிங்கம்வடகிழக்கே ஈசான்ய லிங்கம் 

அமைந்துள்ளன.  இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ன்பது ஆன்றோர் வாக்கு

அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் மது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்திருஅண்ணாமலையார் கோயிலில் 

அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு 

வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளதுஅடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும்,அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக 

அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்

அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளதுகோயிலில் தரிசனம் 

செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் லர் அலங்காரத்துடன் சிறப்பு 

வழிபாடுகள் நடைபெறுகிறதுபாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர்முருகர்கோதண்டராமர்சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி 

தருகின்றனமேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் 

அமைந்திருக்கிறதுதீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் 

பா தரிசனத்தை நாம் காணலாம்திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள்மகான்கள்அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர்ஈசான்ய ஞான

தேசிகர்குருநமச்சிவாயர்குகை நமச்சிவாயர்ரமணமகரிஷி,

தெய்வசிகாமணி தேசிகர்,விருப்பாட்சிமுனிவர்சேஷாத்ரி சுவாமிகள்

இசக்கிசாமியார்விசிறி சாமியார்,அம்மணியம்மன்கணபதி சாஸ்திரி

சடைச் சாமிகள்தண்டபாணி சுவாமிகண்ணாடி சாமியார்சடைச்சி அம்மாள்,

த்ராசல சுவாமிசைவ எல்லப்பநாவலர்பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திரு விளக்கின் விஸ்வரூபம்.  தீபம் என்பது லட்சுமிதேவியின் வடிவத்தையும் (சுடர்),

சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின்சக்தியையும் (வெப்பம்ஒன்றாக சேர்த்ததுதிருவிளக்கு 

தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் 

என்பது ஆன்றோர் மொழிஎனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக 

கருதப்படுகிறதுகார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால்சிவனின்

அருளுடன்மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்தீபஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறதுஇதன் அடிப்பாகத்தில் பிரம்மாதண்டு பாகத்தில் மகாவிஷ்ணுநெய்எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் 

கிடைக்கும் என்கின்றன.எத்தனை எத்தனையோ அரசர்கள்கோயில்களில் தீபம்

ற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்எல்லா 

நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான லன்தரும் என்றாலும்கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள்

இடையூறுகளையும் ஏழரை சனிஅஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக்

கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமானவளமான வாழ்வை அருளும் 

என்பது நம்பிக்கைசிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் 

உச்சியில் மகாதீபவடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும்.

தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள்

சிறப்பு அலங்காரத்துடன் பலவகைவாகனங்களில் பவனி வருவார்கள்ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும்ஏழாம் நாள் ரதஉற்சவமும் சிறப்பாக 

டைபெறும்பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலாவருவார்கள்சுவாமி தேர் பெரியதுஅடுத்தது அம்மன் தேர்இதை பெண்களே வடம் பிடித்துஇழுப்பார்கள்.
பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்குமூலவர் கருவறை முன் 

மிகப்பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதி ஒளி ஏற்றிதீபாராதனை காட்டிஅதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்

இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு 

ஏற்றுவார்கள்அதன்பின்உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள்.இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்துகொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பறையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள்அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளேசென்றுவிடுவார்

து இரண்டு நிமிட தரிசனம்தான்ப்போதே வாசல் வழியே பெரிய

தீவட்டியை (ஜலால ஒளியைஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள்

இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர்.

மக்கள் கோஷமாக"அண்ணாமலைக்கு அரோஹராஎனக்கூறி தரிசனம் கண்டபின்

ல்லம் சென்று வீடுமுழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்து விட்டு விரதம் முடிப்பார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோபசுநெய், 1,000 மீட்டர் காடா துணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.
தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள் தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள்தீப விழாவன்று 

இவர்கள்ஆலயத்தில் கூடுவார்கள்ஆலயத்தார் இவர்களை கௌரவித்த பின் தீபம் ஏற்றும்பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள்

மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்துவிடுவார்கள்ஜலால தீப 

டையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள்இத்தீபம் 11நாட்கள் எரியும்இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந்துள்ளதுஇங்குதான் 

சமயச் சொற்பொழிவுகள்நடைபெறும்இவ்வாலயம் முழுவதும் சுற்றிப்

பார்க் மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை 

தரிசிப்போம்பிறவிப்பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி