ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சிவயோகம்


வாசி யோகம் செய்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். பல சக்திகள் கிடைக்கும் என்கிறார்கள்.  எல்லா சித்தர்களும் சொல்கிறார்கள். பிறகு ஏன் நடக்கவில்லை என்று நினைக்கலாம்.
சரிதான். சரியான வழியில் போனால் தான் நாம் போக வேண்டிய இடத்திற்குப் போகமுடியும். வழி தவறாக இருந்தால் நாம் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியாது.
அப்படித் தான் நாம் செய்யும் வாசி யோகமும். நாம் செய்யும் வாசியோகம் சரியான முறையில்லை. 

சித்தர்கள் விரல் வைக்காமல் வாசி யோகத்தினை செய்யச் சொல்கிறார்கள். அதைச் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். இந்த வகை வாசி யோகம் மறை முகமாகவே நடந்து வருகிறது. 

இந்த வகை தான் சித்தர்கள் செய்தவை.

நீண்ட ஆயுளும் பல சக்திகளையும் பெற முடியும். முதலில் நுரையீரலைப் பெரிதாக்கும் பயிற்சி. பிறகு நுரையீரலைப் பலப் படுத்தும் பயிற்சி. இது தான் சரியான வாசியோகமாகும். இதன் சக்தி மிக அதிகம். வாசியோகத்திலேயே  அனைத்தும் அடக்கம். முறையாக கற்று அறிந்த குருவின் மூலம் பயிற்சி பெறவேண்டும். 

இயற்கைக்கும் பஞ்சபூதங்களுக்கும்
ஒன்பது கோள்களுக்கும் நமக்கும்
நட்பை ஏற்படுத்துவதே வாசியோகம்
என்னும் சிவயோகம்.

சரம் அறிந்தவன் பரம் அறிவான்!!!