வெள்ளி, 15 ஜனவரி, 2016

புத்தரின் பொன்மொழிகள்



உங்களுக்கு நீங்களே ஒளியேற்றிக் கொள்ளுங்கள் இப்படி முற்படுகையில் முன்னோர்கள் சொன்னது முன்னோர்கள் நடந்தது முன்னோர்கள் எழுதியது என்று கூறி அறிவுக்கு மாறானவைகளை ஏற்றுக் கொள்ளாதிர்கள்

மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் அப்படியே தடுமாறாதீர்கள் மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கருதாதிர்கள் மாறாக உங்கள் அனுபவம் என்பதே மிக முக்கியம் அதைப் பயன் படுத்துங்கள்

சாஸ்திரங்கள், சடங்குகள் என்ற மூட்டைகளை உங்கள் முதுகிலோ, மூளையிலோ ஏற்றிக்கொண்டு வாழ்க்கை பயணத்தில் மூச்சுத் தி
றலால் அவதியுறாதிர்கள் தன் முனைப்பு என்ற மூட்டையும் மிகவும் பெருத்த சுமையே.

இவைகளை எல்லாம் களைந்து விட்டு மென்மையானதாக உங்களை ஆக்கிக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் எளிதாக அமையும் தோல்விகளும் துன்பங்களும் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ள ஏதுவாகும்.