ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்க பழனி மலை மீது சிலையைவைத்துள்ளார் போகர்...

பழனி மலைமீது ஏறும் பொழுது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேலைகளைக் கொடுத்துவிட்டு நம் எண்ணம் அனைத்தையும் வானை நோக்கி எண்ணி மகரிஷிகள் காட்டிய அற்புதமான தெய்வ நிலைகள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு நம் கண்ணான புலனறிவில் ஊட்ட வேண்டும்.

அப்பொழுது கதிரவனுடைய நிலைகள் பூமி சுழலும் பொழுது கிழக்காகின்றது. நாம் கிழக்காகப் பார்த்து வணங்கும் பொழுது அந்த சூரியனுடைய காந்த அலைகள் நமக்குள் ஈர்க்கப்படுகின்றது. விண்ணிலே இருக்கக்கூடிய மெய்ஞ்ஞானியின் நிலைகளை ஈர்க்கக்கூடிய நிலைகள் வருகின்றது.

அவ்வாறு மெய்ஞானிகளுடைய நிலைகள் நமக்குள் வரும்பொழுது சூரியனுடைய ஆற்றல் மிக்க நிலைகள், அந்த காந்தசக்தி பெருக காரணமாகின்றது.

அந்த மெய்ஞானிகளுடைய சக்தியைக் கொண்டுதான்
நமது வாழ்க்கையில் நம்மை அறியாது சேரும்
அசுர குணங்களைப் போக்கமுடிகின்றது.

உதாரணமாக நாம் சாலையில் செல்லுகின்றோம் என்றால் ஒரு மாடு மிரண்டு வருகின்றது. அதனுடைய பயத்தை நம் கண் கவருகின்றது.

அந்தப் பயம் நமக்குள் வந்தபின்தான் உணர்வின் நடுக்கமாகி தற்காத்துக் கொள்ளும் உணர்வு வருகின்றது. நமக்குள் வந்து நம் நல்ல குணத்தை செயல் இழக்கச் செய்கின்றது.

நமக்குள் அது நல்ல குணங்களைத் துடிக்கச் செய்யும் பொழுது இந்த அலைகள் நமக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது. நாம் சுவாசித்த உணர்வு நம் உயிரிலே பட்டு அந்த அலைகளைப் பிரம்மமாகச் சிருஷ்டித்து அந்த அலைகள் நமக்குள் அதிமாகப் பெருகிவிடுகின்றது.

ஒரு அணுவின் தன்மை மற்ற கசப்பான நிலைகள் கொண்டு இனிப்பின் நிலைகள் சிறுத்து இருக்கும் பொழுது கசப்பின் அலைகளுக்குள் சிக்கியவுடன் கசப்பின் துணை கொண்டுதான் இனிப்பின் செயல் இருக்கும்.

இதைப் போன்று மனிதருக்குள் நல்ல குணங்களுக்குள் அசுர குணம் சேர்ந்து விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத்தான் பழனி மலையில் இடையில் இடும்பன் என்ற நிலையை வைத்து இந்த அசுர குணம் வேண்டாம் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கி மலையில்கிரிவலம் வருவது.

மனிதனாகப் பிறந்த நாம் இந்த அறுகுணமான தெய்வ நிலைகள் பெறவேண்டும் என்று அவர்கள் உணர்த்திய எண்ணத்தின் தன்மை கொண்டு கிரிவலம் வந்து தூப ஸ்தூபியைப் பார்த்து, அதன் அருகில் நின்றபின்
அங்கிருந்து சன்னதி தெரிகின்றது என்றால்
இந்த தெய்வ குணத்தைப் பெற வேண்டும்,
இதை அருளிய மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
என்று விண்ணை நோக்கி ஏங்க வேண்டும்.

யார் நமக்கு உணர்த்தினாரோ எந்த உணர்வு கொண்டு நாம் வந்தோமோ அந்த உணர்வு கொண்டு சுழன்று வந்து அந்த சிலையைப் பார்த்தவுடன் சன்னதிக்கு முன் நின்று இதை அருளிய மகரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டுமென்று ஏங்கும் பொழுதுதான் நமக்குள் அந்த மெய்ஞ்ஞானிகளின் அருள் ஒளி கிடைக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் மனித உடலுக்குள்ளும் உண்டு என்ற நிலைகளில்பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைச் சிலையாக்கி அதை பழனி மலைமேல் வைத்தார் போக
ர் மாமகரிஷி.

அதில் சொட்டு நீரை விழ வைத்து
அந்தச் சிலையின் சத்தை ஆவியாக்கி,
நம்மைச் சுவாசிக்க வைத்து,
நம்மை அறியாது நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்கினார்.

மலை மீது ஏறிச் செல்லும் பொழுது மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று ஏங்கிச் செல்லும்போது கருவறைக்குள் அந்தச் சிலையை வைத்து, அதன் சத்தை நீர் சொட்ட வைத்து ஆவியாக்கி அதை நமக்குள் சுவாசிக்கச் செய்தார்.

ஆகவே பழனி மலைக்குச் சென்றால் அந்த போக மாமகரிஷி காட்டிய அறுகுணமான நிலைகள் பெறவேண்டும், எங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் துன்பத்தைப் போக்கும் நிலையாக அமைய வேண்டும் என்று எண்ணி வணங்க வேண்டும்.

நீ முருகனாகு என்று ஒவ்வொருவரையும் எண்ண வைத்தார்.
சக்திவேல் என்றால் கூர்மையான எண்ணம்.
ஞானவேல் நமது ஆறாவது அறிவு. எதனையும் அறிந்திடும் அறிவு.

நமக்குள் ஆறாவது அறிவின் கொண்டு பிறரின் தீமைகளை அறியும் பொழுது விஷத்தின் தன்மை பெறுகின்றது. இதைப் போக்குவதற்கு போகர் செய்த நிலை தான் ப
ழனி.