புதன், 29 ஜூன், 2016

பிறவி சூக்ஷமத்தை அறுத்தெரியும் சூக்ஷமம்!

மனம் என்னும் மாயையில்,
மும்மல மயக்கத்தில்,
கர்மவினையின் தேகத்தால்,
பிறவிகள் பல எடுத்து,
பிறவியின் சூக்ஷமத்தை அறியாது, சூழற்ச்சியில் சிக்கிடுமே,
சிக்கிய பிறவியை தான் உணர
பரப்ரம்த்தின் சாட்சியான குருவிடம் சரண்புகுந்து,
ஆத்ம விழிப்பு பெறும் வித்தை தான் உணர்ந்து,
விழிப்பு பயணத்தில்,
ஒளியும் ஒலியில் கரைந்து,
இறை இருப்பில் அமர்வதே,
பிறவி சூக்ஷமத்தை அறுத்தெரியும் சூக்ஷமமாகும்.