புதன், 1 ஜூலை, 2020

தன் உயிரை அறிவதும் உணர்வதும் இறைவனை அறிவதுமாகும். தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்!



"உயிரே கடவுள்".  உண்மை இதுவே!  ஞானம் இதுவே! இதை அறிவதற்காக‌வே    குருவின் உபதேசம்! இதை உணர்வதே திருவடி தீட்ஷை. . இதனை அறிந்து உணர்ந்து தவம் செய்ப‌வ‌னே இறைவனை அடைவான். 

மனிதனாக எக்குறையுமின்றி பிறந்து ஞான  ஒருவரைப்  பணிந்து ஞான உபதேசம் திருவடி தீட்ஷ பெற்று தவம் செய்து தன உயிராக இறைவன் இருப்பதை உணர்ந்து ஊனே ஒளி உடலாக மாறப் பெறலாம். ஞானம் பெறலாம். மனிதனாகப் பிறந்தது இதற்காகவே தான். உயிரை  தான் என்று உணரவே. ஒளி உடம்பு ஆவதற்காகவே.

தன் உயிரை அறிவதும் உணர்வதும் இறைவனை அறிவதுமாகும். தன்னை அறிவதே கடவுளை  அறிவதாகும்.