ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

                    

 தேங்காய் சுவாமிகளின் உருவ  படம் 

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில், வில்லியனூர் துணை மின்நிலையத்தின் எதிரில் ஒரு சிறிய தகர கொட்டகையில் உள்ளது.

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளிடம் வரும் பக்தர்கள் தேங்காயுடன் வருவார்கள்.அதை அவர் உடைத்து அந்த மூடியின் உள்ளே வெள்ளை பகுதியில் இவர் கண்களுக்கு மட்டும் தெரியும் எழுத்துக்களை படித்து மக்கள் மனதில் உள்ளவற்றை கூறுவார். பின் அந்த மூடியின் ஒரு பகுதியை எடுத்து சென்று பூஜையில் வணங்க எல்லா துயரமும் போகுமாம்.

இதனால் இவரை தேங்காய் சுவாமிகள் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை விசேஷ பூஜையும் செய்து சிறப்பித்து வருகிறார்கள்.