செவ்வாய், 10 நவம்பர், 2015

உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே உள்ளது..


இயற்கையின் ரகசியங்களை நீங்கள் அறியத் தொடங்கிவிட்டால், உங்கள் சுவாசத்தின் அளவையும் கவனித்துக்கொள்ளுங்கள், இல்லையேல் பூமியில் உங்களுக்கு இடம் இல்லாமல் போய்விடும். ஏன் என்றால்
இயற்கையின் ரகசியத்தை அறிய முற்படும் போது ஆயுளின் மீது பற்று இருக்க
கூடாது என்பதே முதல் படி ஆகும். என்றும் அனைத்தும் தெரியும் என்ற கர்வம்
தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் தலை பாரம் தாங்காமல் கீழ விழுந்துவிடப்போகிறது. சமுதாயத்தில் மதிப்பும் , கெளரவமும் நாம்
கேட்டு வாங்கும் பொருள் அல்ல! நமது நடவடிக்கைகளை (செயல்பாடுகளை)
கவனித்துக்கொண்டு இருக்கும் சமுதாயம் தானாக கொடுப்பதே மதிப்பும் கௌரவமும் ஆகும்! இயற்கையின் இரகசியங்களை அறிய முற்படும்
போது இப்பூவுலகில் இருக்கும் அனைத்தையும் அதன்
நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். அனைவரையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்,
சம அனுபவம் உடையவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டுங்கள், உங்களை விட
அனுபவம் குறைந்தவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டாதீர்கள். மேல் நோக்கிய
பார்வையே உங்களை மேலும் உயரச் செய்யும் !
{ தனக்குள் இருக்கும் சாவியை அறிந்து கொண்டால் பிரபஞ்சத்தின்
பூட்டை திரக்கமுடியும். }
{ தன்னை பற்றி அறிய முற்படுபவன் மகான் ஆக போகிறான் என்று
அர்த்தம்... உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே
உள்ளது... }
ஓம் நமசிவய