வெள்ளி, 13 நவம்பர், 2015

உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி என்கிறது இந்துவேதம்:

இப் பூவுலகில், இப் புவிப்பரப்பில், இப்பூமியில், இவ்வையகத்தில், இந்த உலகத்தில், இந்த ஞாலத்தில் முத்தமிழ்மொழி ஒன்றுதான் பல நூறாயிரக் கணக்கான சொற்கள் பிண்டங்களையும், பயிரினங்களையும், உயிரினங்களையும், ஐம்புலன்களால் உணர்ந்தறியக் கூடியவைகளையும், ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்டவைகளையும் பெயரிட்டுக் குறிப்பிட்டு பொருள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது.
ஏனென்றால், இந்த முத்தமிழ்மொழி அண்டபேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியாகவும், 1359 அண்டபேரண்டங்களிலும் அருளுலக ஆட்சிமொழியாகவும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியாகவும் அருளுலகப் பேருண்மைகளை அநுபவப் பூர்வமாக அறிந்து கொள்ள உதவக்கூடிய ஒரே ஓர் உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குகின்றது.
இந்த முத்தமிழ் மொழியில் வழங்கப்பட்டுள்ள இந்துவேதம் எல்லா அண்டங்களிலும் இருந்த வேதம், இருந்து வருகின்ற வேதம், இருக்கப் போகின்ற வேதம் என்ற முக்காலப் பொருளின் (வினைத்தொகை) ‘இருக்கு வேதம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது பதினெண்சித்தர்களால்.” [இருக்கு 1:4:48]
[ஆதிசிவனார் அருளிய:இருக்குவேதம் காண்டம்-1, மண்டலம்-4, நாள்வாசகம்-48:]
ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,
அரசயோகிக் கருவூறார்
'அன்பு சித்தர்'