வெள்ளி, 18 டிசம்பர், 2015

உலகின் முதல் வைத்தியர் திருமூலர்!


ஸோஸர் என்னும் ஃபாரோ மன்னரின் பேரமைச்சராக
இருந்தார்.
அவர்தான் உலகின் முதல் வைத்தியர். தற்கால மருத்துவத்தின் 
தந்தை என்று அவரைத்தான் சொல்லவேண்டும். கிரேக்க நாட்டு
ஹிப்போக்ரேட்டஸ் அவருக்குப் பின இரண்டாயிரம் ஆண்டுகள்
கழித்துத் தோன்றியவர். பல நோய்களின் அறிகுறிகள், குணங்கள்,
சிகிச்சை, மருந்துகள், உடற்கூறு போன்றவற்றையெல்லாம்
நன்கு அறிந்திருந்தார்.
Mummification என்னும் உடலைப் பாடம் செய்யும்
முறையையும் அவர்தான் வரையறுத்தார்.
அவருக்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையும் உடலுக்குள்
உயிரை ஒடுக்கி வைக்கும் வித்தையும் தெரிந்திருந்தது.
காயகல்பமும் அறிந்திருந்தார். நான்கு ஃபாரோ மன்னர்களின்
அமைச்சராக இருந்திருக்கிறார்.
அவர் இன்னும் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
சிறந்த பொறியியலாளர். அவர் தான் முதன்முதலில் பிரமிட்
கோபுரத்தைக் கட்டியவர். அவர் கட்டிய கோபுரம் சக்காரா
என்னுமிடத்தில் இருக்கிறது.
சிறந்த கவிஞர். இப்போது எகிப்திய மொழியிலும் இன்னும்
பல ஆஃப்ரிக்க மொழிகளிலும் வழங்கும் பல பழமொழிகள் அவர்
இயற்றிய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டவைதாம்.
MultiGenius அல்லது Multi-Talented Genius வகையைச்
சேர்ந்தவர்.  அவர் கிமு. 2700 வாக்கில் இருந்தவர்.
திருமூலரின் திருமந்திரம் திருஞானசம்பந்தரால்
திருவாவடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நம்பியாண்டார் நம்பியால் பத்தாம் நூற்ராண்டில் பத்தாம்
திருமுறையாக வகுக்கப்பட்டது.
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்.
இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள்......
இம்ஹோட்டெப் காலத்திலும் திருமூலர் வாழ்ந்திருப்பது தெரியும்
கீழ்க்கண்ட வாசகங்கள் ஷாஓலின் மரபைச் சேர்ந்தவை.
ஷாஓலின் மரபு ஒரு தற்காப்புக்கலை மட்டுமல்ல.
அது சன்மார்க்க நெறிகள் அடங்கிய கட்டுக்கோப்பான
சித்தர் மரபு.
போதிதர்மரின் வழி வந்தது.  அதன் நூல்களில் ஒன்றில் வரும் வாசகங்கள் இவை:
People who know others are wise
People who know themselves are enlightened
-Shaolin Chinese Kung Fu Meditations
இப்போது இதைப் பாருங்கள்:
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே
-திருமூலர்