புதன், 30 டிசம்பர், 2015

ஈசன் திருவருள்

இயக்கத்துள் இருக்கும்போது உணராத இயக்கம் !!
இயக்கத்துள் நிற்கும் பொருள் மூலம் உணர்ந்தால் !!
இயக்கத்தால் தான் எதுவும் என்று உணர்விக்கப்பட்டு !!
இயக்குபவன் இயக்கத்தில் அனைத்தும்.... அதில் நாமும் !
நமசிவய!
இன்றைய நாள் !! இந்த நிமிடம் !! இந்த நொடி !! இப்போது !! உன்னிடம் உள்ள அனைத்தும்!! எண்ணம் ! செயல் ! சிந்தை ! ஆடை ! அலங்காரம் ! சுற்றம் ! சூழ்நிலை ! உணர்வு! போன்ற அனைத்துமே திருவருள் !!
இதை அனுபவிக்காமல் ?? நாளை !! அடுத்த நிமிடம் !! அப்போது !! என்று எதையாவது நினைத்து !! துன்பம் என்று உழலாமல்!!
அளித்துள்ள திருவருளை ஆனந்தமாக அளித்த ஈசனின் துணை கொண்டு அனுபவியுங்கள் !! அதுவே திருவருட் பயன் !!
இப்போது இவ்வளவையும் அனுபவிக்க கொடுத்தவன் !! எப்போது எதை அனுபவிக்க கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கட்டும் !!
இப்பதிவை எப்போது படித்தாலும் அந்தத் தருணத்திற்கும் பொருந்தும்!! அது தான் திருவருள் !!
இறைவன்அளித்ததை அனுபவியுங்கள் !! அது ஆனந்தமாகவும் அனுபவமாகவும் இருககும் !! அதுவே திருவருள் !!
எதையும் மாற்றவல்லான் திருவருளே எங்கும் எப்போதும் !! இங்கும் இப்போதும் !!
திருசிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே!