புதன், 30 டிசம்பர், 2015

பழனி நவபாஷாண சிலை


இந்த உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்ஞானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ 

கேட்டால் இது முட்டாள் தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை 
என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைத் தான் பல ஆயிரம் வருடம் முன்பே 18  சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய
சிந்தனையில் உதித்த மருந்து தான் நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார் கிட்டத்தட்ட 4448 நோய்களுக்குரிய மூலிகைகளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாகப் பிரித்து எடுத்தார். அவை கௌரிப் பாஷாணம்,கெந்தகப் பாஷாணம்,சீலைப் பாஷாணம்,வீரப்பாஷாணம்,கச்சாலப் பாஷாணம்,வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், 
சூதப் பாஷாணம்,சங்குப் பாஷாணம்ஆகும்.
இந்த 9 பாஷாணங்களை 9 விதமான எரிபொருளைக் கொண்டு சூடு பண்ணிப் பூமியில் குழி தோண்டி இந்த 9 பாஷாணங்களைப் புதைத்துக் குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்குக் கொடுத்தார்.
இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது.
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக வடித்தார்?மருந்தாகவே மக்களுக்குக் கொடுத்திருக்கலாமே? என்று. இதைப் பற்றி இன்னொரு தகவல்
என்னவென்றால் நவபாஷாணத்தை போகர் கண்டு பிடித்தது  மனிதனின் நோயைப் போக்குவதற்கு இல்லை மனிதனை இறப்பே இல்லாமல் செய்வதற்குத் தான் கண்டுபிடித்தார் என்று
சில சித்தஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கண்டு பிடித்த நவபாஷாணத்தைப் பற்றி கேள்விப் பட்ட மற்ற சித்தர்கள் போகரை "நீ இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய் இந்த நவ பாஷாணத்தை உடனே அழித்து விடு என்று அறிவுரை கூறினார்கள். உடனே தன் தவறை உணர்ந்த போகர் அந்த
பாஷாணங்களை அழிக்க மணமில்லாமல் அதைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாதுபடி முருகன் சிலையாகச் செய்து பழனியில் வைத்து விட்டார். இந்தக் கதையைக் கேட்டவுடன் சில பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்?  என்று.  இதை உங்களுக்குஅறிவியல் பூர்வமாகவே விளக்குகிறேன்.
அதாவது இப்போது உள்ள DNA (மரபணு) ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு மனிதனின் மரபணுவை சுத்திகரிப்பதன் மூலம் இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம் என்று கூறுகின்றனர். அதை போல் இந்த நவபாஷாணம் ஏன் நமது மரபணுவை சுத்திகரித்து இறப்பை தடுக்கக் கூடாது.ஏது
எப்படியோ இந்த நவபாஷாணத்தை நமது அரசாங்கம் தான் ஆய்வுக்கு உட்படுத்தி அதோடு உண்மை தன்மையை உலகுக்குத் தெரியப்படுத்தப் வேண்டும். மக்கள் அனைவரும் சித்தர்களின் இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நோக்கம். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கி நாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையைச் செய்தவரும் இவர் தான்.
இவரைப் பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தைக் கொடுக்கும். இவரைப் பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய போகர் சப்தகாண்டம் என்ற நூலில் அவர் குறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.  இப் பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799,1800 ஆம் பாடலில் விமானத் தொழில் நுட்பத்தைப் பற்றிய குறிப்பையும்
அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாகக் கூறிப்பிட்டிருக்கிறார். அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி  இஞ்சின் (Steam Engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் வரைவையும் வடிவமைக்கிறதையும் குறிப்பிட்டிருக்கிறார். 
இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டு பிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால், அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது தான் வேதனையளிக்கிறது.  தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும். உலகத்தின் முதல் இனமும் முதன் மொழியும் முதல் அறிவியல் விஞ்ஞானியும் முதல் மருத்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.