புதன், 14 அக்டோபர், 2020

மரமும் மனிதனும்


 
மரத்தின் கீழ்அமர்ந்து தவம்செய்து சக்திகளை பெற்று வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள்.

ஏன் அப்படி செய்தார்கள் என்றால், மரத்துக்கு, இயற்கைக்கு ஏற்றாற் போல மாறும் தன்மையுண்டு.  தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், மரம் காற்றின் மூலமாகவும் சூரியனின் மூலமாகவும் சக்திகளை பெற்று, தண்ணீர் கிடைக்கும் வரை உயிருடன் இருக்கின்றது

அது எப்படிக்  கிடைக்கின்றது? எப்படி மனிதன் அந்த சக்திகளைப்  பெறுவது என்று தெரிந்து கொள்வதற்காக மரத்தின் கீழ் அமர்ந்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த மரத்தின் அத்தனை இலைகளும் சுவாசிக்கின்றன என்பதைத்  தெரிந்து கொண்டார்கள்.  மரத்தின் எல்லா இலைகளும் சூரியனின் கதிரின் மூலமாகக் கிடைக்கும் சக்திகளைப் பெறுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள் 
இதை வைத்துத்தான் மரம் தண்ணீர் இல்லாத போதும் வாழ்கிறது என்று தீர்மானித்தார்கள் .

அப்படி என்றால் மரத்தைப் போலவே நாமும் உணவு இல்லாமல் வாழ முடியுமா என்று உடலை ஆராய்ச்சி செய்தார்கள். அப்பொழுது தான் நமது தலைமுடியாலும் சுவாசிக்க முடிகிறது என்பதைக் கண்டு உணர்ந்திருக்கிறார்கள். அதை அறிந்து கொண்ட சித்தர்கள், தலைமுடியை வளர்த்தார்கள்.  இதைத் தெரிந்து கொண்டபின்னர் இயற்கையோடு நாமும் ஒன்றி வாழ்ந்தால்,  நம்மால் இன்னும் பல சக்திகளை பெறமுடியும் என்று உறுதி செய்தார்கள். இதற்காகத்தான் தலைமுடியை வளர்த்தார்கள்.