சனி, 29 ஜூன், 2013

தியானத்தின் படிமுறைகள் ....

தெளிந்த அறிவிலே நிறைபேறு பெற குரு என்ற உதவி மட்டுமே எப்போதும் உள்ளது...
மனிதன் முன் பின் எந்த ஒரு குருவினிடம் ஆழ்ந்த மன அலைத்தொடர்பு கொண்டு இருக்கிறாரோ, அவருக்கெல்லாம் குருவின் உதவியானது தொடர்ந்து கிடைப்பது மட்டுமின்றி, ஆழ்ந்த தொடர்பின் அளவிற்க்கு அறிவின் உயர்வும் உணர்த்தப் பட்டு விடுகிறது...
குரு என்ற இருப்பானது உடல் வடிவத்தினை ஆரம்பத்திலே நாம் பார்த்தாலும், காலப் போக்கிலே அணுகும் சீடனின் ஆழ்ந்த தியானத்திலே இறை அனுபவத்தினை உணர்வதற்கு உள்ள உதவியாகிறது...
ரமண மகரிஷி நான் யார்? என்று ஆத்ம விசாரம் மூலம் தியானத்திலே உயர்ந்து, சஹஜ சமாதி நிலையிலேயே ஆழ்ந்து ஒடுங்கி எப்போதும் அந்த அசையாத ஆழ்ந்த மௌனத்திலே இருந்து விலகாது பேரின்ப நிலையிலேயெ இருந்தார்...
அவரிடம் குண்டலினி தியானத்தினைப் பற்றிக் கேட்ட போது, மனம் தான் குண்டலினி என்றார்...
குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் குண்டலினி தியானத்தினை மூலாதாரத்திலே தொட்டு உணர்த்தி, உயர்த்தி, ஆக்ஞா சக்கத்திரத்திலே உயிரின் இருப்பை ஒரு கணத்திலே தொட்டு உணர்த்தும் வல்லமையான தியானத்தினைத் தந்திருக்கிறார்..
கணபதி முனி என்கிற தவ சீலர் திருவண்ணாமலையிலே ஆழ்ந்த தியானத்திலே ஆழ்ந்து இருந்த போது, கடுமையான வலியிலே தவித்தார்... வெங்கடராமன் என்கிற பெயரை மாற்றி, பகவான் ரமண மகரிஷி என்று மாற்றியவர் தான் இந்த காவிய கண்ட கணபதி முனி அவர்கள் தான் ...
அவரை காப்பாற்றுமாறு அவரின் சீடர்கள், பகவான் ரமணரிடம் முறையிட்ட போது, ரமணர்,  கணபதி முனி அவர்களை பார்த்து, இந்த வல சிறிது நேரத்திலே மாறிவிடும் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம்... சிறிது நேரத்திலே அவர் அந்த வலி போய்விட்டதாம்...
ரமணரிடம் கேட்டபோது, அவர் சொன்னாராம், ஆழ்ந்த தியானத்திலே லயிக்கும் போது எழும் குண்டலினி எழும் போது சில நேரத்திலே இந்த மாதிரியான உபாதைகள் இருக்கும் என்றும், தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னாராம்....
நமது தியான நெறியிலே இருந்து ஆழ்ந்த தவத்திலே லயித்து மணிக்கணக்கிலே ஆழ்ந்து தியானம் செய்பவர்கள் அவரவர் அனுபவத்தினை சொல்வது என்பது மறை பொருள் விளக்கமாகவே ஆகும்...
தொடர்ந்து குருவோடு பேசிக் கொண்டே மன அலைத்  தொடர்பிலே ஆழ்ந்து இருந்த போது, இறை நிலை தவத்திலே ஆழ்ந்த நிலையிலே செல்லச் செல்ல எமக்கு ஏற்படற அனுபவம், அவரவர்க்கு தனியானது.. 
ஆழ்ந்த இறை தவத்திலே சிவ களத்திலே தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க , நிற்க எண்ணங்கள் குறைந்து வர வர, விடும் மூச்சின் அளவு குறைந்து கொண்டே வரும் என்பதை உணரலாம்..