வியாழன், 27 ஜூன், 2013

ஞானம் தேடும் பக்தர்கள் :-


தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ? ...

ஏடுகளின் மூலம் எழும் ஞான ஆர்வம் :-
ஏட்டினிலே கதைத்து விட்ட ஞானம் கற்று
ஏக்கமுற்று அதையடைய எண்ணம் கொண்டு,
போட்டவிடந்தனிற் பொருளைத் தேடிக் காணும்
பொது அறிவைக் கூட உபயோகிக்காமல் -
நாட்டிலுள்ள அனுபோகப் பொருட்கள் மீது
நாடி நிற்கும் அறிவைப் பண்படுத்த வேண்டி
காட்டுக்குப் போய் கனியும் கிழங்கும் உண்டு
காலத்தைக் கழிப்பதனால் பலன் தான் என்ன?

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்