சனி, 28 நவம்பர், 2020

கார்த்திகை தீபம் ஏற்றும் போது......05.12..2014

"துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை,
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை -தன்பகத்தைக்
காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும்
அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.''

பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளைக்  களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.
விளக்கம்: இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.