வியாழன், 12 மார்ச், 2015

அண்ட பேரண்ட அரச யோகி கருவூரார் !


தமிழே தெய்வம், தெய்வமே கடவுள், கடவுள் மனுஷன், மெய்யே பிண்டம், பிண்டமே அண்டம், அண்ட பிண்டம் என்பது தத்துவம்.  

தத்துவம் என்பது ஒன்றரை லட்சம் (1,50,000) அணுக்கள் 
தொண்ணூற்றாயிரம் (96000) இணைப்புகள் 
எழுப்பத்திரெண்டாயிரம் (72000) நாடி நரம்புகள் 
ஆயிரத்தியெட்டு (1008) சிவலயம் 
முன்னுதினார்ப்பதியாறு (346) சக்திலயம் 
நூற்றியெட்டு (108) ஆதார சக்கரம் கொண்ட பிண்டம். 

பிண்டத்தை சீர்குலைக்கும் நாலாயிரத்து நாற்பத்திஎட்டு (4448) வித பிணிகள்.

இதை சோதித்து பார்க்கும் நாடி நரம்புகள் பத்து (10) அதில் மிக முக்கிய நாடி வாத, பித்த, கபம், வாதத்தில் வாதம் பித்தம் கபம், பித்தத்தில் பித்தம் வாதம் கபம், கபத்தில் கபம் வாதம் பித்தம். இவை தவிர குறு நாடி ஒன்று உண்டு.

இவைகளை சோதித்து கற்பம் சாப்பிட்டால் காயமான பிண்டம் நிலைக்கும். 

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200


மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன. 

அவையாவன, 
1. இடகலை 
2. பிங்கலை 
3. சுழுமுனை 
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி 
7. அத்தி 
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி 

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும். 

அகத்தியர் கவி:

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு 
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே 

சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி 
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி 
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே 

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.


இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாது. அந்த நோய்களாவன:

1. காற்று 
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல் 
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல் 

இதனை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு 12 பற்கள் அமைத்து எங்கள் குருதேவர் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய பதினோராவது பதினென் சித்தர் கருவூரர் உறுதிபடுத்திஉள்ளார்.