வியாழன், 26 மார்ச், 2015

நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜிப்போம்,

மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று இன்புற்று வாழ்வோம்.
பெண்கள் நெற்றியில் பொட்டு(திலகம்) வைக்கும்பொழுது என்ன சொல்ல வேண்டும்
          பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும்பொழுது "ஓம் திருமூலதேவாய நம", "ஓம் காளாங்கிதேவாய நம", "ஓம் போகதேவாய நம", "ஓம் கருவூர் தேவாய நம" என்று சொல்லி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலையில் நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லிவிட்டு, நெற்றியில் பொட்டு வைத்தால், உடல் ஆரோக்கியம் உண்டாகும், திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும், பண்புள்ள புத்திரபாக்கியம் அமையும், தகுதியுள்ள கணவன் அமைவான், இனம் புரியாத கவலைகள் நீங்கும், தன்னம்பிக்கை உண்டாகும், எந்த துன்பத்தைக் கண்டும் சோர்வடையமாட்டார்கள், எதையும் தாங்கிக்கொள்ளும் மன உறுதி ஏற்படும், உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மலச்சிக்கல் நீங்கும், வீண் ஆடம்பரத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள், மற்றவர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தமாட்டார்கள், தாம் உண்டு தன்வேலை உண்டு என்று தம் கடமையைச் செய்வார்கள், இன்னும் அநேக நற்குணங்களும் அமையும். மேலும், ஞானமும் சித்திக்கும்.
ஞானியர்களின் திருவடியைப் பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம்.