புதன், 15 ஏப்ரல், 2015

மனமே குரு அறிவே இறைவன்!

மனமே குரு அறிவே இறைவன்
அருளை அனுவப்பொருளாக பெற்று மனிதனாக வாழலாம்!

1. மனிதன் பிறப்புக்கு காரணம் பேராசையே 
2. மனிதன் இறப்பிற்கு காரணம் பொறாமையே 
3. மனிதன் உடல் அழிவிற்கு காரணம் மலசலமே
4. மனம் புத்தி அறிவு மழுங்கக் காரணம் மலசலமே
5. அழிவைத் தவிர்க்க விருப்பு வெறுப்பு இல்லாமை வேண்டும்
6. மனமே மூலம் மூலத்தை அசையாமல் வைத்தால் ஞானம் வரும்
7. மனம் புத்தி அறிவு நன்றாக இருக்க மூலம் என்ற மனம் தெளிவாக வேண்டும்
8. வாழும் கலை பயின்றால் உடல் அழிவை தவிர்க்கலாம்
9. வாசி யோகம் என்பது நாடி சுத்தியே
10. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசான கலையே
11. மனம் அமைதியாவதர்க்கு வாசி யோகமே 
12. வாசி கட்டு  
13. மனிதனுக்கு யோகக்கலை ஆசனம், வாசி யோகம் இரண்டும் இரு கண்கள் 
14. மனம் அசையாமல், உடல் அசைவதில்லை 
15. யோகாசனமும் வாசியோகமும் கட்டுபட்டால் இறைவனை தெரிந்து கொள்ளலாம்
16. இறையைத் தெரிந்தால் சித்தனாகலாம்
17. சித்தன் என்றால் பிறப்பு இறப்பு இல்லையே 
18. பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப பெருநிலையை அடையலாம்.
கடவுள் இல்லை! கடவுள் இல்லை!! கடவுள் இல்லவே இல்லை!!!
கடம் + உள் கடவுள் வெளியில் இல்லை.
கடவுளாவது முன்னோர்களும் மூததையர்க்களுமே, மூத்தோர் மதித்தல் முன்னோர் முதாதையர் வாழ்த்துதல் வணங்குதல் தொழுதல் கும்பிடுதல்.
தன்னை தான் அறிய தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகிறனே

முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியில் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ தறிவாம்  அக்தன்றிப்
பின்னை அறிவது பேய்அறி வாகுமே
- என்று தாத்தா தமிழ் சித்தர் திருமூலர் சொல்லுகிறரர்.
தமிழனின் மானம் காத்த 64வது சித்தர் பெரியார் தத்துவமானது,
தன்னை அறியும் அறிவே பெரிய அறிவு
அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு
அறிகின் றனமறை ஈறுகள் தாமே
மண் மனம் எங்கு உண்டோ அங்கு வாயுவும் உண்டு
மண் மனம் எங்கு இல்லையோ அங்கு வாயுவும் இல்லை
மண் மனதுள் மகிழ்ந்து இருப்பவரே சித்தர்கள் சித்தர் பிடாதிபதிகள் ஆகையால் மனமே குரு அறிவை அறிந்தவன் ஆண்டவன் அல்லது இறைவன் அல்லது குரு அல்லது இயற்கை.
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி உடன்ஈக 
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளத் தெளியச் சிவபதம் தானே!
கருவூரார் - அவர்களும் சொல்லும் தத்துவம் என்னவென்றால்,
ஆவி ஆன்மா ஆருயிர் ஒன்றாவதற்கு, மனம் வாக்கு காயம் அறிய மந்தரம், மந்திரம், மந்திறம்
தத்துவ பிறப்பாயே வித்தே! மகேசா!
மகாதேவே! நீ தீயே யாகி
தன்னோடு உருத்திரப் பிறப்பைச் சாதித்தாய்;
என்னோடு உன்னோடன்றி எங்கும் அருளூற
ஓம் நமசிவாய சிவாய நம ஒலியருளினாய்;
தழைத் தெழு நீ! நாங்கள் பிழைத்தெழ அருளுநீ!
அழைக்கிறோம்! செழுந்தீயே! செழித்தெழு நீ!
வாசிவாசி! வாசிவாசி! வாசிவாசி!
வசிவசி! வசிவசி! வசிவசி!
ஓம் காயந்திரிந்து சிவமாகட்டும்;
ஓம் ஆவி, ஆன்மா, ஆருயிர் ஒன்றாகட்டும்;
தத்துவமே! நமச்சிவாய மென்றுணர்ந்தோம்
சித்தாந்தமே! சிவாய நாம வென்று ணர்ந்தோம்
நங்! மங்! சிங்! வாங்! யங்!
காத்தருளுக! காத்தருளுக! காத்தருளுக!
ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
தன்னையறிந்து தலைவனையறியப் பயன்படும்
அருளூறு காயந்தரி மந்திரம்
ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக !
தத்துவ வித்துக்கள் அரணாகுக !
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்
தீயே யோகப் பரஞ்சோதி யாகும் !
தலைவனுக்குள் தன்னை நிறுத்தித் திரம் பெற்றிடுவதற்காக ஓதும் அருளூறு காயந்தரி மந்திரம்
ஓம் சத்தியே, காத்தாயி அயனாய வித்தின் மகவே !
வாலையே! கன்னியே! குமரியே! நங்கையே! தீயென மலர்ந்திடு.
தீயே, உன்னோடு தூர்த்திடு பிரச்சினை யாவும்
தாயே, என்னோடு உயிரினப் பயிரினக் காப்பு வழங்கிடு.
சீவபுராணம்
தத்துவம் தொண்ணூத்தாறு

சிவ தத்துவம் ஐந்து
வித்தியா தத்துவம் ஏழு
ஆன்ம தத்துவம் இருப்பதினான்கு

பூதங்கள் ஐந்து
ஞானேந்திரியம் ஐந்து
தன்மாத்திரைகள் ஐந்து
கன்மேந்திரியங்கள் ஐந்து
அந்தகரணம் நான்கு

தாத்துவீகம் அறுபது
பிருதிவியின் காரியம் ஐந்து
அப்புவின் காரியம் ஐந்து
தேயுவின் காரியம் ஐந்து
வாயுவின் காரியம் ஐந்து
ஆகாயத்தின் காரியம் ஐந்து

வாயுக்கள் பத்து
நாடிகள் பத்து
ஏடனை மூன்று
கன்மேந்திரியங்களின் தொழில் ஐந்து
குணங்கள் மூன்று
வாக்குகள் நான்கு

தத்துவம் முப்பத்தாறு தாத்துவிகம் அறுபது ஆக தத்துவங்கள் தொண்ணூத்தாறு.

தத்துவங்களின் தோற்றம் ஒடுக்கம் முதலியவைகளை ஆராய்ந்து அறிவது தத்துவ விசாரணை. அவற்றை தன் வசப்படுத்தி வெற்றி கொண்டால் மரணம் இல்ல பெருவாழ்வு வாழலாம்.

இல்லையேல் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்
கோயில் கொண்டன்றோ குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டங்கே வழிநின்றளுவர்
தாயில் கொண்டாற் போல் தலைவனென் னுட்புக
வாயில் கொண்டீசனு மாளவந்தானே.
இந்து மதமான இந்து வேதத்தில் மனித இனம் மேன்மை அடைவதற்காக சாதி, மதம், மாச்சரியம் எனும் பேதம் இல்லாமல் எல்லா உயிரினங்களும் மேன்மை அடைவதற்காக சீவனான சிவன் நமக்காக தன் கைப்பட எழுதி கொடுத்தது தான் தத்துவம் எனும் சீவபுராணம்.
நாம் ஒவ்வருவரும் நம் வாழ்வில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்து மிகவும் மனம் நொந்து வேதனையில் வாழ்ந்து கொண்டு உருகிறோம். இந்த துன்பங்களில் இருந்து விடுபட, நாம் ஒவ்வருவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எந்த வேளை செய்து கொண்டுருந்தாலும், வெளியூர் பயணம் செய்து கொண்டிருந்தாலும், ஓயுவு எடுத்துக் கொண்டுருந்தாலும் எந்த நேரத்திலாவது சிவபுராணம் எனும் சீவபுரணத்தின் பாட்டின் தத்துவத்தின் பொருள் உணர்ந்து சொல்லுங்கள். அப்படி சொல்லுங்கால் இயற்கை எனும் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். விடுதலை பெற்று அவரவர்களின் ஆன்மாவின் அறிவுத் திறமையால் துன்பம் அகற்றி இன்பம் எனும் அருளை அனுபவப் பொருளாக பெற்று பிறப்பிறப்பற்ற பெருநிலை வாழலாம் இவ்வையகத்தில்.