புதன், 29 ஏப்ரல், 2015

சித்தர்ளின் இரசவாதம்

உண்மையான இரசவாதம் என்பது தத்துவம். தத்துவம் என்பது இந்து, விந்து, உயிர், அணு என்று பொருள். 
முதல் கீரன் உகத்தில் கல் தோன்றி மண் தோன்றி இயற்கை என்ற பஞ்சபூத தத்துவத்தின் செயல்பாட்டால் விதை தோன்றி பருவகால மாற்றத்தால் பயிரினம், உயிரினம் தோன்றி உயிர்களின் என்நெற்ற மாற்றத்தால் உருவம் தோன்றி உருவமாற்றத்தால் மனிதன் தோன்றினான். மனிதன் மனிதனாக வாழ்வதற்க்கு இயற்கையின் சத்திகளை கண்டு சிந்தித்து பயிற்சி, முயற்சி செய்து சித்தியானர் சித்தர்கள். 
சித்தர்களின் இந்து மதமான இந்து வேதம் இந்து வேதத்தின் ஆண்டு இன்று சுமார் 43,73,116 நாற்பத்தி மூன்று லட்சத்து எழுபத்தி மூன்று ஆயிரத்து நூற்றி பதினாறு ஆண்டுகள் ஆகிறது. 
இவ்வாண்டுகளுக்கு முன் சித்தர்களின் தலைவனான முதல் சித்தன் சீவனான சிவன் ஆயகலை 64- அறுபத்தி நான்கு அதில் 54- ஐம்பத்தி நான்காவது கலையாக ரசவாதக் கலை தத்துவம் என்று கூறுகிறார். 
இரசவாதம் என்பது மிகவும் கீழான உலோகமான இரும்பை மிக உயர்ந்த உலோகமான பொன் தங்கம்.
தங்கமாக செய்வதற்கு பல ரசவாத மூலிகைகளின் சாறு கொண்டு சுருக்கு கொடுத்து அரைத்து கவசம் செய்து புடம் செய்து தங்கம் செய்யலாம்.

அத் தங்கத்தை இதே மூலிகைகள் கொண்டு பற்பம் செந்தூரம் செய்து சாப்பிட உடம்பை காயத்தை எந்தவித பிணி பதிப்பு இல்லாமல் நீண்ட நாள் ஆயுளுடன் இருப்பதற்க்கு செய்த பொருள் இதுவே ரசவாத மூலிகை என்றும், காய கற்பம் என்றும் பல தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.


இரசவாதம் என்பது திரவம் தண்ணீர் வடிவம் உள்ள இலிங்க ரசத்தை சில மூலிகைகளின் சாறு கொண்டு திட பொருள் அதாவது கெட்டியான பொருள் செய்வதற்கு உதவும் மூலிகை ரசவாத மூலிகை என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இத்திடப் பொருளை பல ரசவாத மூலிகைகளின் சாறு கொண்டு சுருக்கு கொடுத்து அரைத்து கவசம் செய்து புடம் போட்டு பற்பம் செந்தூரம் செய்து சாப்பிட உடம்பை காயத்தை அழியாதிருக்க செய்து காக்கின்ற மூலிகைகள் என்ற காயகற்ப மூலிகைகள் என்று பல தமிழ் சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இரசவாதம் வேறு ஆடல் வல்லான் எல்லாம் வல்லான் சித்தர்களின் தலைவன் முதல் சித்தன் சித்தர் பீடாதிபதி சிவனான சிவன் சிவபெருமான் ரசம் என்பதை நவநீதிஎன சிறப்பித்து சொல்லப்படும் பூமிலுள்ள சத்திவாய்ந்த பொருளான தொட்டால் ஓடக் கூடியதுமான பாதரசத்தை புகையாது செய்தும் மணியாக கட்டி அதற்கு சாரனை மூலம் குளிகை செய்து சித்திக்கு வேண்டிய வழியில் பயன்படுத்தினர். 

இதை தாயுமானவர் கூறுகிறார்:

வெண் தணலில் ரசம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம் 
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம் 
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் 
மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்.

இதையே அகத்தியர் கூறுகிறார்:

தானென்ற ஞானிக்கு குளிகை யுண்டு 
சர்ருகிறேன் புலத்தியனே சார்ந்துகேளு 
தேனென்ற விந்துவல்லோ ரசமிதச்சு 
திரண்டுமணி யாவதற்கு வகையைக்கேளு 
மானென்ற அக்னியே புடந்தா னாகும் 
மக்களே ரசமனியின் மார்க்கத் தாலே 
ஊனென்ற சடத்திலே மணிபோற் செய்தால்
உத்தமனே ககனத்தி லோ லாமே

கொங்கணர் கூறுகிறார், 
ஓடலாம் அட்சயமாம் ரசத்தை கேளு 
உத்தமனே பதினொருக்கால் விடுவித்தாக்கால் 
ஆடலாம் அட்டமா சித்தியெட்டும் 
அணி மாவும் கரிமாவும் லகிமாவோடு 
தேடலாம் மகிமாவும் பிரார்த்தியோடு 
சேர்ந்த எட்டு மாடலாம் செய்யக்கேளு
நீடலாம் பூரணத்தில் சென்றுபுக்கி
நிலைக்கலாம் திரும்பலாம் நீங்கள்கேளே 

பாம்பாட்டி சித்தர் சொல்லுகிறார்:
தேனில் வீழ்ந்த ஈயைப் போலச் சிந்தை குலைந்து 
திகையாமல் சிற்சொருப தெரிச னைக்கண்டு 
வானிற்பறந் திடச்சுத வான்ம ணிதீர்ந்து
வாயீற் போட் டேகநீ நின்று ஆடு பாம்பே!
யூகிமுனி சொல்லுகிறார்,

இருந்து பார் சூதத்தை எவ்வண்ணத்தாலும்
இருக்கினலன் தேவனடா இடுக்கணீல்லையே

போகர் சொல்லுகிறார்:
ஆடுகின்ற சூதமென்ற யானை கட்டுமானால்
ஆச்சர்ய ரசவாதம் கொசுவைப் போலாம் 
நாடுகின்ற சூதமணி தாழ்வாடமாய்ப் போட்டு 
நலமாக சுகாசனத்தி லிருந்து கொண்டு
ஊடுவாய் சிவசிவா வென்று கொண்டால் 
உவந்து முன்னே பஞ்சகர்த்தர் நிர்பார்பாரு 
தேடுவார் கேட்டதெல்லா மீவார் ரசன்
செக சால வித்தையெல்லார் தெளிந்து போமே

உண்மையான இரசவாதம் என்பது தத்துவம். தத்துவம் என்பது இந்து, விந்து, உயிர், அணு என்று பொருள். 

இருத்தி பார் பாதரசத்தை எந்த விதத்தாலும் ரசத்தை இருக்கி கட்டியவன் இறைவனுக்கு சமம் ஆன்றோர் வாக்கு ஆண்டவன் வாக்கு மெய்ஞான சித்தர்களின் வாக்கு. ரசம் என்பது விந்து கரு உரு உருவம் மனிதன் என்று பொருள் மண் நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்றும் மெய்,வாய், கண், மூக்கு, செவி என்றும் சொல்லுகிறார்கள். இதை ஆள்வது ஒரு தத்துவம்.

இத் தத்துவத்தை சீவனான சிவன் முதல் சித்தன் சொன்னது. ரசம் என்ற விந்து நாதம் என்ற சுரோணிதம் சேர்ந்து கருவின் மூலமாக ஏற்பட்ட உயிர் என்ற உயிர் உருவத்தை ஆள்வது தொன்னுத்தாறு தத்துவம் கூறுகின்றது. இதை திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார்,

முப்பது முப்பது முப்பத் தறுவரும்
செப்பு மதிலுடைக் கோவிலுள் வாழ்பவர்
செப்பு மதிலுடைக் கோயில் சிதைந்தபின் 
ஒப்பி லனைவரும் ஓடெடுத்தாரெ
தத்துவங்களின் தோற்றம் ஒடுக்கம் முதலியவைகளை ஆராய்ந்து அறிவது தத்துவ விசாரணை. அவற்றை தன் வசப்படுத்தி வெற்றி கொண்டால் மரணம் இல்லாத  பெருவாழ்வு வாழலாம்.

இல்லையேல் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார் 
கோயில் கொண்டன்றோ குடிகொண்ட ஐவரும் 
வாயில் கொண்டங்கே வழிநின்றளுவர் 
தாயில் கொண்டாற் போல் தலைவனென் னுட்புக 
வாயில் கொண்டீசனு மாளவந்தானே